“ஆளுநர் பாஜக செய்தித் தொடர்பாளரைப் போலவே செயல்படுகிறார்” – மம்தா பானர்ஜி

இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைக்கு மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பதை மம்தா பானர்ஜி நினைவுபடுத்தினார். ஹேமதாபாத் பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) எம்எல்ஏ தேபேந்திர நாத் ரேவின் “அரசியல் கொலைக்கு” பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) இருப்பதாக குற்றம் சாட்டியதற்காக மேற்கு வங்க முதல்வர் கூறுகையில் “ஒரு பாஜக செய்தித் தொடர்பாளர் போல ”ஆளுநர் ஜகதீப் தங்கர் செயல்படுகிறார் என விமர்சித்தார். வடக்கு தினாஜ்பூரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ, தேபேந்திர … Read more

இறந்த பாஜக எம்எல்ஏ சட்டையில் இருந்து தற்கொலைக் குறிப்பை மீட்ட போலீசார்.!

இறந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் பாக்கெட்டில் இருந்து தற்கொலைக் குறிப்பு கிடைத்ததாக வங்காள காவல்துறை தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 454 கி.மீ தூரத்தில் உள்ள வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய்  ஒரு கடைக்கு வெளியே  தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்த உள்ளூர் வாசிகள் போலீருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய் உடலை கைப்பற்றி … Read more

#BREAKING: மேற்கு வங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்பு.!

பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தை  சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய் . இன்று காலை அவரது வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தேபேந்திர நாத் ராய் கொலை செய்த பின்னரே தூக்கிலிடப்பட்டார் என்று எம்.எல்.ஏ.வின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின்  உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வர பூஜை நடத்திய பாஜக எம்எல்ஏ.!

கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வர கர்நாடகா பாஜக எம்எல்ஏ யாகம் நடத்தியுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஹோன்னலி தொகுதி பாஜக எம்எல்ஏ மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யார் கொரோனா வைரசுக்கு எதிராக யாகம் நடத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வைரஸில்லா உலகம் மீண்டும் உருவாக வேண்டும் என்றும் அவர்கள் பூஜை நடத்தி உள்ளனர். பூஜையில் கலந்துகொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்ததுடன், முகக்கவசம் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரனாவிற்கு கோமியம் தான் மருந்து- ஆலோசனை கூறிய பாஜக எம்எம்ஏ

உலகையே உலுக்கி கடும் அச்சத்தை ஏற்படுத்தி  வரும் கொரானா வைரசுக்கு கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவைகள் சிறந்த மருந்து என பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிபிரயா தெரிவித்துள்ளார். சீனாவில் பரவிய இந்த கொடூர கொரோனா வைரஸ் படிபடியாக உலக நாடுகளிலும் பரவியது மட்டுமல்லாமல் உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. இந்த வைரசிற்கு பலியாகக்கூடியவர்களின் எண்ணிகையானது நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ள நிலையில் தற்போது அது இந்தியாவிலும் பரவியுள்ளதை மைய அரசு உறுதி செய்துள்ளது. இதனால் … Read more

பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் மூலம் கொரோனா வைரஸ் குணப்படுத்தலாம்.! பாஜக எம்.எல்.ஏ.!

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தில் வங்கதேசத்திற்கு பசுக்கள் கடத்தப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது  பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா, ‘பசுவின் சிறுநீர் மற்றும் சாணம்’ மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும்’ என கூறினார். மேலும் பசுவின் சிறுநீர் மற்றும் சாணம்மூலம்  கேன்சர் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் வலிமை  உள்ளது. குஜராத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில்  கேன்சர் நோயாளிகளின் மீது பசு சாணத்தை தேய்க்கின்றனர். பசு சீறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தமும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது … Read more

“வேலை இல்லாத கோவத்தில் வாலிபர்கள்” பாலியல் ஈடுபடுகிறார்கள் BJP MLA சொல்கிறார்..!!

வேலைவாய்ப்பு இல்லாத, விரக்தியடைந்த வாலிபர்களால், பாலியல் குற்றங்கள் நடந்து வருவதாக பாஜக பெண் எம்.எல்.ஏ. கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர், ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் மாணவி ஒருவர் 12 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவரும், உச்சானா கலான் பெண் எம்.எல்.ஏ.-வுமான பிரேமலதா, வேலையில்லாதவர்கள் மற்றும் விரக்தியடைந்த இளைஞர்கள், கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார். … Read more