பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் மூலம் கொரோனா வைரஸ் குணப்படுத்தலாம்.! பாஜக எம்.எல்.ஏ.!

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தில் வங்கதேசத்திற்கு பசுக்கள் கடத்தப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது  பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா, ‘பசுவின் சிறுநீர் மற்றும் சாணம்’ மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும்’ என கூறினார்.

மேலும் பசுவின் சிறுநீர் மற்றும் சாணம்மூலம்  கேன்சர் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் வலிமை  உள்ளது. குஜராத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில்  கேன்சர் நோயாளிகளின் மீது பசு சாணத்தை தேய்க்கின்றனர்.

பசு சீறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தமும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது போன்ற மருத்துவ குணம் வாய்ந்த பசுவை  வங்க தேசத்திற்கு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்  என கூறினார்.

author avatar
murugan