அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு..!

அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளதாவது, அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதை குறிக்கும் இந்த நோய் ‘கில்லென்-பார்ஸ் சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ரா செனகா, ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா ஆகிய தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அரிதாக … Read more

“அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது”- பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்துள்ள இந்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் களமிறங்கி, தடுப்பூசியை கண்டுபிடித்து, உலகளவில் தற்பொழுது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட … Read more

WHO பரிந்துரைத்துள்ளதா ? இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை என தகவல் வெளியாகி உள்ள நிலையில்,இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி,இன்று  நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் ,சீரம் நிறுவனம் , ஃபைசர் நிறுவனங்கள்  தடுப்பூசி தயாரித்து உள்ளன. ஆக்ஸ்போர்டு … Read more

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த சீரம் நிறுவனத்தின் கோரிக்கை இன்று பரிசீலிக்கப்படுகிறது.!

கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கான சீரம் நிறுவனத்தின் கோரிக்கை இன்று பரிசீலிக்கப்பட உள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் இன்று நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்படும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்ட் என பெயரிடப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்க இங்கிலாந்து அரசு மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பின் (எம்.எச்.ஆர்.ஏ) அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டுக்கான சோதனைகளை … Read more

#Breaking: ஃபைசரை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கும் பிரிட்டன் ஒப்புதல்!

பிரிட்டனில் அதிவேகமாக கொரோனா பரவிவரும் நிலையில், ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராசெனக்கா இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி தற்பொழுது … Read more

அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசிக்கு இந்தியா அடுத்த வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்கும்!

அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசிக்கு இந்தியா அடுத்த வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வருட காலமாக உலக மக்கள் முழுவதும் அச்சமடைந்து வாழ்வதற்கு காரணமான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தனது வீரியத்தை சற்றே குறைத்து உள்ளது என்றே கூறலாம். நாளுக்கு ஒரு லட்சம் பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்ட இடத்தில், தற்போது 30 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதிய தொற்றுகள் இருந்தாலும் முந்தைய நாட்களில் பாதிப்புகள் … Read more

ரஷ்யா தடுப்பூசி உடன் இணைய அஸ்ட்ராஜெனெகாவிடம் ஒப்பந்தம்.?

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி டெவலப்பர்கள் தடுப்பூசிகளை இணைக்க முயற்சிக்க அஸ்ட்ராஜெனெகாவிடம் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. ரஷ்ய கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், இங்கிலாந்து மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி உடன் இணைக்க முயற்சிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. கடந்த திங்களன்று அஸ்ட்ராஜெனெகா அதன் தடுப்பூசியின் இடைக்கால முடிவுகளை வெளியீட்டு அளவை பொறுத்து இரண்டு வெவ்வேறு நிலைகளின் செயல்திறனைக் காட்டுகிறது. ஒரு மாத இடைவெளியில் இரண்டு முழு அளவுகளை நிர்வகிக்கும் நோயாளிகளின் … Read more

வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் கொரோனா தடுப்பூசி.!

கொரோனா நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகளில் பல உலக நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடம் மட்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கி வந்தது. ஆனால், தற்போது இந்த கொரோனா தடுப்பூசி வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கி சோதனையில் சாதகமான முடிவை தந்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆஸ்ட்ரோஜெனகா நிறுவனம் கூறியதாவது, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பல நாடுகளுக்கு இந்த தடுப்பூசி திருப்புமுனையாக … Read more

மீண்டும் கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம் – அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம்

அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரசை தடுக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர்  மாதம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையின் போது, தன்னார்வலர்  ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக … Read more

ஜப்பானில் மீண்டும் தொடங்கிய கொரோனா தடுப்பூசி சோதனை.!

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் ஜப்பானில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பிரிட்டிஷ் தன்னார்வலரின் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு அமெரிக்கா அதிகாரிகளுடன் ஆலோசனை தொடர்கின்றன. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை ஜப்பானில் மருத்துவ குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் ஜப்பானில் மீண்டும் தொடங்கியதாக பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் … Read more