ஜப்பானில் மீண்டும் தொடங்கிய கொரோனா தடுப்பூசி சோதனை.!

ஜப்பானில் மீண்டும் தொடங்கிய கொரோனா தடுப்பூசி சோதனை.!

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் ஜப்பானில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பிரிட்டிஷ் தன்னார்வலரின் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு அமெரிக்கா அதிகாரிகளுடன் ஆலோசனை தொடர்கின்றன.

கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை ஜப்பானில் மருத்துவ குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் ஜப்பானில் மீண்டும் தொடங்கியதாக பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் சோதனைகள் ஏற்கனவே மறுதொடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube