காற்று மாசு : டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவு!

டெல்லியில் காற்று மாசு தொடர்வதால் பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவு வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்துவதாலும், சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள காற்று மாசை தடுக்க முழு … Read more

#Breaking:காற்று மாசுபாடு…3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கலாமா? – அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

டெல்லி:காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் என்று டெல்லி அரசு பல்வேறு யோசனைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் தூசி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே,அதனைக் குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு … Read more

காற்று மாசுபாட்டால் திணறும் தலைநகர்:2-நாள் பொது முடக்கம் போடலாமா? – உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி:தலைநகரில் மாசு அளவைக் கட்டுப்படுத்த டெல்லியில் இரண்டு நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக புகை மூட்டத்தில்(காற்று மாசுபாட்டில்) மூழ்கியுள்ளது.இதனால்,வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே விளக்குகளை எரிய விட்டு செல்கின்றன.அங்கு நிலவும் காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் உள்ளது.இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி … Read more

டெல்லி காற்று மாசு : டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை …!

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு டீசல் ஜெனரேட்டர்கள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரிப்பது ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஏனெனில், இதற்கு காரணம் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாய பயிர்களை எரிப்பதும், வாகனங்கள் வெளியிடும் புகையும் தான் என கருதப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநிலத்தின் சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதமாக … Read more

காற்று மாசுபாட்டை குறைக்க,இந்தியாவின் முதல் புகை கோபுரம்;திறந்து வைத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக  ஒரு புகை கோபுரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தா டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக  கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள பாபா கரக் சிங்கில் ஒரு புகை கோபுரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார். அதன்பின்னர்,பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “இது அமெரிக்க தொழில்நுட்பத்தை” பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மேலே இருந்து மாசுபட்ட காற்றை உறிஞ்சி, மாசுக்களை … Read more

அதிர்ச்சி தகவல்..! எமனாக மாறிய காற்று மாசு, இந்தியாவில் ஏற்படும் கருச்சிதைவு..!

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, காற்றின் தரம் குறைவாக இருப்பதால், கருச்சிதைவுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று தி லான்செட் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துவது மூலம் கருச்சிதைவுகள் அபாயத்தை குறைக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவில் ஆண்டுக்கு 349,681 கருச்சிதைவுகள் ஏற்பட்டுப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்ணயித்த ஒரு கன மீட்டர் காற்றில் (10 μg ) மைக்ரோ கிராம் நுண்துகள் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. … Read more

காற்று மாசு.. டெல்லியில் இருந்து சோனியாகாந்தி வெளியேற மருத்துவர்கள் அறிவுறுத்தல்..?

டெல்லியில் அதிகரித்து வரும் மாசு காரணமாக, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அடுத்த வாரம் வரை டெல்லியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சுவாசிப்பதில் பிரச்சினை தொடர்ச்சியாக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சோனியா காந்தி வாரம் வரை டெல்லியில் இருந்து வெளியேற உள்ளதாகவும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி  ஆகியோர் இன்று கோவா செல்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில் சோனியா … Read more

சென்னை: கடந்தாண்டு தீபாவளியை விட இந்தாண்டு காற்று மாசு குறைவு.!

சென்னையில் கடந்தாண்டு தீபாவளியை விட இந்தாண்டு தீபாவளிக்கு காற்று மாசு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.பல மாதங்களாக நாடையே உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .ஆனாலும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது . மேலும் ஒரு சில இடங்களில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசுகளை விற்கவும்,வெடிக்கவும் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. … Read more

காற்று மாசுபாட்டால் கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு!

காற்று மாசுபாட்டால் கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் 6.7 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் மக்கள் வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதாலும் எரிபொருள் சாதனங்கள் பயன்படுத்த கூடிய நிறுவனங்கள் அதிகரித்துள்ளதலும், காற்று மாசுபாடு மிக அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளும் வருடம்தோறும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு மட்டும் காற்று மாசுபாட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் எனும் … Read more

6 வயது குழந்தைக்காக இந்தியாவை விட்டு வெளியேறும் குடும்பம்! என்ன காரணம் தெரியுமா?

டெல்லி அருகாமையில் உள்ள நொய்டாவில் மனோஜ் ஓஜா – துலிகா தமபதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் பரிதி என்ற மகள் உள்ளார். இந்த குடும்பத்தினர் அந்த பகுதியில், நல்ல வேலை, சொந்த வீடு, லட்சக்கணக்கான வருமானம் என மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தற்போது இந்தியாவையே விட்டு வேறு நாட்டிற்கு செல்ல உள்ளதாக கூறுகின்றனர். இதற்கு காரணம் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தான். இவரது குழந்தை பருத்திக்கு சுவாச பிரச்னை உள்ளதால் … Read more