மதுராந்தகம் சாலை விபத்து – நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுராந்தகம் சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு.  நேற்று மகாதீபம் முடிந்து திரும்பி வருகையில் மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு சென்ற கண்டெய்னர் லாரி மீது டாடா ஏஸ் வாகனம் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. டாடா ஏஸில் பயணித்த சந்திரசேகர், சசிகுமார், தம, ஏழுமலை, சேகர், கோகுல் எனும் 6 பேர் சம்பவ … Read more

திருவண்ணாமலை சென்று திரும்பும் போது கோர விபத்து.! 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.! 

திருவண்ணாமலை சென்று திரும்பி கொண்டிருக்கையில் டாடா ஏஸ் வாகனமானது லாரி மீது மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   நேற்று கார்த்திகை மகாதீபம் நிகழ்வு திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை காண தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக திருவண்ணாமலை வந்திருந்தனர். குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வந்துள்ளனர். அதில், செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் , ஞானமணி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் 10 பேர் குட்டியானை எனப்படும் டாட்டா ஏஸ் … Read more

Madhya Pradesh:பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி, 12 பேர் படுகாயம்

ஞாயிற்றுக்கிழமை மாலை மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் சாலையோர பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது  வேகமாக வந்த டிரக் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்  மற்றும் 10 பேர் காயமடைந்தனர், அவர்களில் எட்டு பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாக  என்று காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிரக் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அபிஷேக் திவாரி தெரிவித்தார்.

மாடு மோதி 4-வது முறையாக விபத்தில் சிக்கிய ‘வந்தே பாரத்’ ரயில்..!

வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி 2 மாதத்தில் 4-வது முறையாக விபத்துக்குள்ளானது.  இந்தியாவின் அதிவேக ரயில் சேவையான வந்தே வாரத் துறையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் அவ்வப்போது மாடுகள் மோதி விபத்துக்குள்ளாகும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே மூன்று முறை ரயில் மீது மாடுகள் மோதி விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக மாடு … Read more

காஞ்சிபுரம் அரசு பேருந்தின் மீது லாரி மோதி கோர விபத்து.! 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி.!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, சாலவாக்கம் பகுதியில் அரசு பேருந்து மீது கனரக லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், படூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளது. அப்போது சாலவாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் கல்குவாரியில் இருந்து வந்த கனரக லாரி பக்கவாட்டு பகுதியில் மோதியுள்ளது. இதில், லாரியில் இருந்த பக்கவாட்டு தகரம் மோதியதில் பேருந்தில் பயணித்த ரதி … Read more

படுகொலைச் சாலை! 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி – மநீம

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, போதுமான அளவுக்கு பயன்பாட்டுச் சாலைகள் இல்லாததும், சாலை வடிவமைப்பில் உள்ள குளறுபடிகளும்தான் … Read more

மதுரை; உயிரிழந்தவருக்கு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு

மதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர். மதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று முன்தினம் மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் நிலத்தில் புதைந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பவர் பள்ளத்தில் சிக்கி, … Read more

விபத்தில் சிக்கியவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

அறிவாலயம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயம் சென்று கொண்டிருந்த போது, சாலையில் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்துள்ளார்.  அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த திரு.அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதை கண்டு கான்வாய் வாகனத்தை … Read more

ஆம்புலன்ஸ் விபத்து – கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு..!

சிவகங்கை மாவட்டம் செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று மரத்தில் மோதியதில் கர்ப்பிணி பெண் உட்பட 2 பெண்கள் உயிரிழப்பு.  சிவகங்கை மாவட்டம் செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று கர்ப்பிணி பெண்ணை ஏற்றி சென்ற நிலையில், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஆம்புலன்சில் 21 வயதான கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் இருந்தனர். இந்த நிலையில், இந்த விபத்தில், கர்ப்பிணிப் பெண் நிவேதா மற்றும் தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் … Read more

தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து 16 மாணவர்கள் காயம்!

விருத்தாசலம் அருகே போட்டி போட்டு சென்ற தனியார் பள்ளி வேன்கள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து. விருத்தாசலம் அருகே கோபாலபுரத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 மாணவர்கள் காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளி வாகனங்கள் போட்டி போட்டு ஒட்டி சென்றபோது ஒரு வாகனம் மீது மற்றொன்று மோதியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போட்டி போட்டு பள்ளி வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர்களை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் … Read more