திருவண்ணாமலை சென்று திரும்பி கொண்டிருக்கையில் டாடா ஏஸ் வாகனமானது லாரி மீது மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நேற்று கார்த்திகை மகாதீபம் நிகழ்வு திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை காண தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக திருவண்ணாமலை வந்திருந்தனர். குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வந்துள்ளனர்.
அதில், செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் , ஞானமணி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் 10 பேர் குட்டியானை எனப்படும் டாட்டா ஏஸ் வாகனத்தில் நேற்று மகாதீபம் நிகழ்வுககா திருவண்ணாமலை சென்றுள்ளார்.
நேற்று மகாதீபம் முடிந்து திரும்பி வருகையில் மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு சென்ற கண்டெய்னர் லாரி மீது டாடா ஏஸ் வாகனம் பின்னால் மோதியுள்ளது. அதே நேரம் டாடா ஏஸ் வாகனம் பின்னால் வந்த வேன் டாடா ஏஸ் மீது மோதியது.
இதில் நடுவில் சிக்கிய டாடா ஏஸில் பயணித்த சந்திரசேகர், சசிகுமார், தம, ஏழுமலை, சேகர், கோகுல் எனும் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அதில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பயணித்த அனைவருமே தினசரி வருமானம் பெரும் கூலி தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் இறந்த செய்தி அப்ப்குதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.