#Breaking:பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் மைசூர் அருகே விபத்தில் சிக்கியது 4 பேர் காயம்

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர்  கர்நாடக மாநிலம் மைசூரு அருகே காரில்  சென்றுகொண்டிருந்தபொழுது விபத்தில் சிக்கினர். பிரஹலாத் மோடி தனது மகன் மற்றும் மருமகளுடன் பந்திப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது மதியம் 2 மணியளவில் நஞ்சன்கூடுக்கு அருகில் உள்ள கடகோலா என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலை டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தை உறுதி செய்த மைசூர் தெற்கு போலீசார், குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஜேஎஸ்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், காயங்கள் சிறியவை என … Read more

கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார் விபத்து..!

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் கார் விபத்துக்குள்ளானது.  கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த சுற்றுலா வாகனம் ஒன்று தவறுதலாக ராதாகிருஷ்ணனின் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அவரது காரின் முன் பக்கம் சேதம் அடைந்தது. அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

பாராகிளைடிங் செய்யும் போது 50 அடி உயரத்திலிருந்து விழுந்த கொரிய நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு

குஜராத்தின் மெஹ்சானாவில் 50 வயது தென் கொரிய நபர் ஒருவர் பாராகிளைடிங் செய்யும் போது விபத்துக்குள்ளாகும் காட்சி வீடியோவில் வெளியாகியுள்ளது. ஷின் பியோங் மூனின் பயன்படுத்திய  பாராகிளைடர்  சரியாக திறக்கப்படாமல் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் இந்த விபத்து நடந்ததாக போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார். மூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,எனினும்  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோர விபத்தில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள்..! 7 பேர் பலி..!

ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேனி மாவட்டம், குமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில், ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சம்பவ இடத்தில் 7 பேர்உயிரிழந்தனர். மேலும், சிறுமி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 3 பெரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேருக்கு நேர் மோதிய கார்-பேருந்து..! 3 கல்லூரி மாணவர்கள் பலி..!

தனியார் பேருந்தும் காரும்  நேருக்கு நேர் மோதியதில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.  தூத்துக்குடி கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் காரும்  நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் சென்ற கீர்த்திக், அவரது நண்பர்கள் செந்தில்குமார், அஜய் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.!

அரசு சொகுசு பேருந்து ஒன்று பெங்களூருவில் இருந்து வருகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து அரசு பேருந்து வருகையில்,திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்புகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நல்லவேளையாக உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

#BREAKING: அதிமுக கொடிக் கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு!

அதிமுகவின் 100 அடி உயர கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததில் அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழப்பு. சென்னையை அடுத்து மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், உள்ள அதிமுக கொடிக் கம்பத்தை கழற்றி மாட்டும் போது, கம்பம் தவறி விழுந்ததில் அதிமுகவைச் சேர்ந்த செல்லப்பன் என்பவர் உயிரிழந்தார். மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக … Read more

#Accident : அரசுப்பேருந்து தீப்பிடித்து விபத்து.! 2 பேர் உயிரிழப்பு.! வெளியான பரபரப்பு வீடியோ..!

நாசிக் அருகே ஏற்பட்ட விபத்தில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் இருவர் இறந்தனர், மற்றும் பலர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா: நாசிக்-ல் உள்ள சின்னார் நெடுஞ்சாலையில் ஷிண்டே-பால்ஸ் சுங்கச்சாவடி அருகே இரண்டு அரசுப் பேருந்துகளும் மற்ற வாகனங்களுடன் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு பேருந்தானது அங்கிருந்த மற்ற பைக்குகள் மீது மோதியதில் அந்த இடத்திலேயே தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சிகள் மீட்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து தீப்பிடித்து எரிந்த … Read more

மதுராந்தகம் சாலை விபத்து – நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுராந்தகம் சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு.  நேற்று மகாதீபம் முடிந்து திரும்பி வருகையில் மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு சென்ற கண்டெய்னர் லாரி மீது டாடா ஏஸ் வாகனம் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. டாடா ஏஸில் பயணித்த சந்திரசேகர், சசிகுமார், தம, ஏழுமலை, சேகர், கோகுல் எனும் 6 பேர் சம்பவ … Read more

திருவண்ணாமலை சென்று திரும்பும் போது கோர விபத்து.! 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.! 

திருவண்ணாமலை சென்று திரும்பி கொண்டிருக்கையில் டாடா ஏஸ் வாகனமானது லாரி மீது மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   நேற்று கார்த்திகை மகாதீபம் நிகழ்வு திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை காண தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக திருவண்ணாமலை வந்திருந்தனர். குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வந்துள்ளனர். அதில், செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் , ஞானமணி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் 10 பேர் குட்டியானை எனப்படும் டாட்டா ஏஸ் … Read more