அதிக கட்டண வசூல்.! ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம்.!

அதிக கட்டணம் வசூலித்ததாக 49 ஆம்னி பேருந்துகளுக்கு 92,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  விடுமுறை காலம் வந்தாலே, தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை தனியார் பேருந்துகளுக்கு அறிவுறுத்த ஆரம்பித்து விடும். அதையும் மீறி ஒரு சில தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாக இருந்து தான் வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கியதும் விடுமுறைக்கு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு தனியார் பேருந்துகளில் … Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா.? போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த விளக்கம்.!

மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் போன்ற திட்டங்களால் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றாலும், கட்டணம் உயர்த்தப்படாது. மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை … Read more

பேரூந்துகட்டணம் உயர்த்தப்படுகிறதா..? – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

தமிழ்நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி.  நாமக்கல்லில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், தமிழ்நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. ஆனால், அண்டை மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துத்துறையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

போக்குவரத்து வீதிமீறல் – கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவு

சென்னையில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாக … Read more

தீபாவளி சிறப்பு பேருந்துகள்.! தமிழக போக்குவரத்து துறைக்கு 9.5 கோடி வருமானம்.!

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு 9 கோடியே 54 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.  ஒவ்வொரு வருடமும், தீபாவளி தினம் போன்ற பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளியூரில் வேலைபார்க்கும் மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை சற்று எளிதாக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல இந்த வருடமும் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மொத்தமாக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பேருந்தகள் … Read more

சென்னையில் ஒரே நாளில் ₹15.5 லட்சம் அபராதம் வசூல் – போக்குவரத்து காவல்துறை

சென்னையில், நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.  சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில், நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.5 … Read more

இவர்களுக்கு இலவச பயணம்…அனுமதிக்காத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை – போக்குவரத்து துறை எச்சரிக்கை!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது விசாரணை மேற்கொண்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தங்கள் பணியின் போது அரசு பேருந்துகளில்(A/C பேருந்து உட்பட) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) மற்றும் அவர்களின் மனைவி அல்லது கணவர் அல்லது உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க … Read more

#BREAKING : தமிழகத்தில் மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..! – தமிழக அரசு

தமிழகத்தில் மூன்று அமைச்சர்களின் துறைகள்  மாற்றியமைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மூன்று அமைச்சர்களின் துறைகள்  மாற்றியமைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தொழில்துறை அமைச்சரிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை உழவர்நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் வசம் இருந்த விமான போக்குவரத்து, தொழில்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகம் தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜன.16 அன்று பயணம் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திரும்பி தரப்படும் – போக்குவரத்து துறை

ஜனவரி-16 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்களில் அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு … Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் செலுத்தப்பட்டது- போக்குவரத்துத்துறை தகவல்!

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊழியம் வழங்கப்பட்டு விட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இன்று காலை முதல்எந்த பேருந்துகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் சென்னை மாநகரத்தில் எந்த வித பேருந்துகளும் இயங்கவில்லை. முறையாக எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென நடந்த வேலை நிறுத்ததால் … Read more