போக்குவரத்து வீதிமீறல் – கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவு

சென்னையில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு கடந்த 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை காவல்துறை தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment