தொழிலாளர்கள் போராட்டத்தில் இல்லை.. தலைவர்கள் தான் போராட்டத்தில் உள்ளனர்.! – அமைச்சர் சிவசங்கர்.

Minister Sivasankar - TN Bus Strike

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்களான சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள், வரவு செலவு பற்றாக்குறை விவரங்கள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வுஊதிய திட்டத்தை செயல்படுத்துவது, 15வது ஊதிய ஒப்பந்த கொள்கை நிறைவேற்றம். வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களின் நிலுவை தொகை, பஞ்சபடி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனால் … Read more

இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.!

Tamilnadu Govt Bus transport workers Strike

தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைளை முன்வைத்து நாளை (ஜனவரி 9ஆம் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். ஏற்கனவே, கடந்த 3ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை  தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 8ஆம் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த பேச்சுவார்தையானது சென்னை தேனாம்பேட்டையில் … Read more

பேரூந்துகட்டணம் உயர்த்தப்படுகிறதா..? – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

தமிழ்நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி.  நாமக்கல்லில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், தமிழ்நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. ஆனால், அண்டை மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துத்துறையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சென்னை மாநகர பேருந்துகளில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு சேவை தொடக்கம்..!

சென்னை மாநகர பேருந்துகளில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு சேவையை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்.  சென்னையில் மாநகரில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டத்தை போக்குவரத்து துறை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின், அந்த பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேருந்தில் பயணித்தனர். பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு 300 மீட்டர் முன்பாக தமிழ், ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பேருந்து நிறுத்த பெயர்களை … Read more

மகளீர் இலவச பேருந்து – இந்த செய்தி வதந்தி : அமைச்சர் சிவசங்கர்

மகளிர் இலவச பேருந்தில் விருப்பப்பட்டால் கட்டணம் என்பது ‘வதந்தி’ என அமைச்சர் சிவசங்கர் ட்வீட்.  அமைச்சர் பொன்முடி, ஒரு மேடையில் ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து மூதாட்டி ஒருவர், நான் இலவசமாக பயணம் செய்யமாட்டேன். பணம் கொடுத்து தான் பயணம் செய்வேன் என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், … Read more

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிப்பதில்லை – அமைச்சர் சிவசங்கர்

ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிக்காது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி.   போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஆமினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் பல்வேறு வகைகள் இருப்பதால் பல்வேறு … Read more

பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.சிலர் தெரிந்தே, கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. இ விபத்தினை தவிர்க்க பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்குமாறு கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் 21,000 பேருந்துகள் இருக்கிறது. பண்டிகை காலங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.சிலர் தெரிந்தே, கூடுதல் கட்டணம் … Read more

சாதாரண பயண கட்டண பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு குட்நியூஸ்..!

சாதாரண பயண கட்டண பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த, நான்காவது கட்ட பேச்சுவார்த்தை 12.05.2022 அன்று மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் திரு. போக்குவரத்துத்துறை தலைமையில், முதன்மைச் செயலர் டாக்டர் கே.கோபால்,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டாவை … Read more

#BREAKING : இனிமேல் இவர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது – அமைச்சர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார். தற்போது மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. … Read more

மாணவி கனிமொழியின் குடும்பத்திற்கு அமைச்சர் சிவசங்கர் ரூ.10 லட்சம் நிதி உதவி

நீட்தேர்வால் உயிரிழந்த மாணவி கனிமொழியின் குடும்பத்திற்கு அமைச்சர் சிவசங்கர் திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.  மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில், நீட் தேர்வினை எழுதிய அரியலூரை சார்ந்த கனிமொழி என்ற மாணவி  நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தனக்கு மருத்துவ படிப்பு சேர்க்கை கிடைக்குமா..? என அச்சம் இருப்பதாக தனது … Read more