தக்காளி விலை கிடுகிடு உயர்வு… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.! ஒரு கிலோ 40, 42.!

தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக, அதன் விலை வெளிச்சந்தைகளில் உயர்ந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் பகுதி விவசாயிகளிடம் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து, பண்ணை பசுமை கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது.  அதன்படி, சென்னை, பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ஒருகிலோ 40 முதல் … Read more

#Breaking:தக்காளி விலை உயர்வு – ஒரு கிலோ விலை இதுதான்!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.அதன்படி,நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது.மேலும்,பெங்களூரு தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதே சமயம்,முட்டைகோஸ் ஆனது கிலோ ரூ.20-ரூ.25க்கும்,ஒரு கிலோ காலிபிளவர் ரூ.18-ரூ.20க்கும் ,உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.26 வரை என கணிசமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் காய்கறிகளின் வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பால் … Read more

தேர்தலுக்கு பின் முதல் முறையாக வெளியில் சென்ற பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு தக்காளி வீச்சு.., வீடியோ

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில்  44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால், இரண்டாவது முறையாக பிரான்சில் அதிபராக முன்றாவது ஜனாதிபதி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். ஆனால், வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம்மானுவேல் பெரும்பான்மையயை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 63% வாக்காளர்கள் இமானுவேல் மக்ரோனை விரும்பவில்லை என … Read more

தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை ….!

தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் தக்காளி வரத்து குறைவால் கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் கேரளாவிலும் தற்பொழுது தக்காளியில் வரத்து குறைந்துள்ளதால், … Read more

கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு…!

கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு. தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி  குழுமத்திற்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 4 மணி முதல் அடுத்த  நான்கு வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த … Read more

சென்னையில் தக்காளி விலை 70 ஆக உயர்வு..!

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 லிருந்து 70 ஆக அதிகரிப்பு கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் தக்காளி வரத்து கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி கடும் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரையிலும், சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 … Read more

#BREAKING : வாகனத்தில் தக்காளி விற்க அனுமதிக்கலாம் – நீதிபதி கருத்து..!

தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா..? நீதிமன்றம் கேள்வி. கொரோனா கட்டுப்பட்டால் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக்கோரி பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எங்கள்  சங்கத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் 150, 300, 600 சதுர அடி கொண்ட கடையை வைத்துள்ளவர்கள் தான் உள்ளனர். 1200 முதல் 2400 பரப்பளவு சதுர அடி கொண்ட … Read more

கோயம்பேடு மார்க்கெட்டை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40-க்கு விற்க தயார் – வியாபாரிகள்!

கோயம்பேடு மார்க்கெட்டை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ருபாய் 40க்கு விற்க தயார் என உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் தகவல். தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த பல நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது, எனவே தமிழகத்தில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிட்டத்தட்ட ஆப்பிளின் விலைக்கு நிகராக தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று சில மாவட்டங்களில் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு … Read more

குட்நியூஸ்..!தமிழகத்தில் தக்காளி விலை குறைந்துள்ளது!

தமிழகத்தில் ஆப்பிளுக்கு இணையாக விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி விலை தற்போது ரூ.30 அளவில் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வாகும்.ஏனெனில், தக்காளி விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து பல பகுதிகளில் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால்,கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் … Read more

#BREAKING: ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை- தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை. இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகள் குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85/- ரூ.100/ வரை குறைவான விலையில் … Read more