கொரோனா முன்னெச்சரிக்கை.! பெங்களூரு விமனநிலைத்தில் தீவிர பரிசோதனை…

பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அண்டைநாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் கொரோனவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அதன்படி,  பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை … Read more

குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை.! பீகார் அரசு புதிய உத்தரவு.!

பீகாரில், விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் குறிப்பிட்ட பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட உள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பீகாரில்,  விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட வேண்டுமென பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை என்பது அனைவருக்கும் செய்யப்படவில்லை. சளி, இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.! கோவிட்ஷீல்டு நிறுவன தலைமை நிர்வாகி வேதனை.!

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகள் பற்றிய செய்தி உண்மையில் வேதனை அளிக்கிறது.- கோவிஷீல்டு தயாரிப்பு  நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி. அண்டை நாடான சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் அந்த நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் துவங்கியுள்ளன. மேலும், சில நாடுகளில் இதே போல கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளில் முக்கியமான ஒன்றான கோவிஷீல்டு தயாரிப்பு  நிறுவனம் செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் … Read more

அதிகரித்துவரும் கோவிட் நோயாளிகள்! இருக்கையிலேயே மயங்கி விழுந்த சீன மருத்துவர், வீடியோ உள்ளே.!

சீனாவில் அதிகரித்துவரும் கோவிட் நோயாளிகளால், இருக்கையிலேயே சீன மருத்துவர் மயங்கி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது. 2020 ஆம் ஆண்டு தொடங்கி கொரோனா வைரஸ் இந்த உலகை பாடாய்படுத்தி எடுக்க காரணமாக இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் வேளையில் தற்போது மீண்டும் சீனாவில் இதே கொரோனா வைரஸ் அங்கு தலை தூக்க ஆரம்பித்துள்ளது. தினமும் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவிலுள்ள ஒரு மருத்துவமனையில், மருத்துவர் ஒருவர் … Read more

மீண்டும் படையெடுக்கும் கொரோனா.! அதிகரிக்க போகும் உயிரிழப்புகள்.? சீன சுகாதர நிபுணர் எச்சரிக்கை.!

அடுத்த 90 நாட்களில் (3 மாதங்கள்) சீனாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும். – சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங்.  உலகையே அச்சுறுத்திய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தற்போது தான் மக்கள் கொஞ்சம் மறந்து மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளனர். ஆனால், தற்போது சீன சுகாதார நிபுணர் வெளியிட்டுள்ள தகவல் உலக நாடுகளை சற்று அச்சுறுத்தியுளளது. சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங் கொரோனா தொற்று பற்றி கூறுகையில், ‘  அடுத்த 90 … Read more

உலகில் கோவிட்-19 எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் 90% பேர்.! ஆனாலும் ஓர் ஆபத்து.! WHO சிறப்பு தகவல்.!

உலக மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் இப்போது கோவிட்-19 வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. உலக அளவில் கொரோனா கோவிட்-19 தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். லட்சக்கணக்கானோர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பெரும்பாலானோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு கோவிட் 19 தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வந்தனர். இருந்தாலும், கொரோனா வைரஸ் கோவிட் 19 எனும் மாறுபாட்டை தாண்டி அடுத்தடுத்த … Read more

டிக்டாக்கில் வரும் ஐந்து செய்திகளில் ஒன்று தவறானவை – NewsGuard

டிக்டாக் விடீயோக்களின் நம்பகத்தன்மையை பற்றிய அறிக்கையை நியூஸ்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்யா-உக்ரைன் போர், கோவிட்-19 மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முக்கிய செய்தித் தலைப்புகளுக்கான TikTok தேடல் முடிவுகள் தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. அந்த தளத்தால் தானாகவே பரிந்துரைக்கப்பட்ட ஐந்து செய்தி வீடியோக்களில் கிட்டத்தட்ட ஒன்று தவறான தகவலைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. இது பற்றி விளக்கமளித்துள்ள டிக்டாக் நிறுவனம் “தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும் அத்தகைய … Read more

கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19!! மக்கள் பூஸ்டர் ஷாட் பெற அரசாங்கம் வலியுறுத்தல்!!

கோவிட்-19  அதிகரித்து வருவதை எடுத்துரைத்த கர்நாடக சுகாதார அமைச்சர் கே சுதாகர், 17 சதவீத மக்கள் மட்டுமே பூஸ்டர் ஷாட்களை எடுத்துள்ளனர் என்றும், மக்கள் பூஸ்டர் ஷாட் பெறுமாறு அனைவரையும் வலியுறுத்தினார். கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை (டிஏசி) சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒட்டுமொத்த தேசத்திலும்  கோவிட்-19 ஒரு உயர்வைக் காண்கிறது. கர்நாடகத்தின் கோவிட்-19 வழக்குகள் தற்போது 7.2 சதவீத அதிகமாக உள்ளது. பெங்களூரு, ஷிவமொக்கா, பாகல்கோட், பெல்லாரி போன்ற நகரங்களில் உள்ள மாநில … Read more

கார்பெவாக்ஸ் நாளை முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும்..

நாளை (ஆகஸ்ட் 12) முதல் பொது மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸாக கார்பெவாக்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்பெவாக்ஸ் ஆனது, கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய தடுப்பூசியாகும். “ஜூன் 4, 2022 அன்று 18 வயதுடைய தனிநபர்களுக்கான கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) அங்கீகரித்த பிறகு இந்த ஒப்புதல் கிடைத்தது” என்று BE இன் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. பயோலாஜிக்கல் இ … Read more

குரங்கு காய்ச்சலில் இருந்து கோவிட்-19 வரை, நோய்களின் மையமா கேரளா??

சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், கடுமையான மூளையழற்சி நோய்க்குறி, மேற்கு நைல் மூளையழற்சி, டெங்கு, வைரல் ஹெபடைடிஸ், நிபா, பன்றிக் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் குரங்கு அம்மை என அனைத்தும் நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மக்கள்தொகையில் கேரளா 3 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் பல வெளிநாட்டினர் வசிக்கின்றனர். வேலைக்காகவோ அல்லது படிப்புக்காகவோ கேரளாவைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். கேரளாவைத் தவிர, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் … Read more