சென்னை அரசு மருத்துவமனையில் கஞ்சா பறிமுதல்..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதோடு அவர்களிடம் இருந்து கஞ்சாக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக … Read more

கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா…? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

மதுவை போல கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கல்யாணிபெட்டியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு கூறுகையில், போலி மது விற்பனையை தடுக்க தான் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது என கூறியுள்ளது. போலி மது விற்பனையை குறைப்பதற்காக டாஸ்மாக்கை திறந்துள்ளோம் என கூறும் தமிழக அரசால் கஞ்சாவையும் சட்டரீதியாக விற்க முடியுமா என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அதே சமயம் … Read more

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை

தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கஞ்சா விற்ற வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்க கோரி,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகளானது நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, ஒருதுறையின் மீது குற்றம் சுமத்தும் போது, அந்த துறை நேர்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த  வேண்டும். தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா … Read more

காரில் கடத்த ரெடிய இருந்த ரூ.2.5 லட்சம் கஞ்சா பறிமுதல்..!கடத்தியவர் கைது..!!

திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் பகுதியில் காரில் கடத்தவிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர்.மேலும் தெக்கலூரில் இருந்து திருப்பூருக்கு காரில் குட்காவை கடத்தி வந்த ராம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். DINADUVADU

மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 18 கிலோ கஞ்சா சிக்கியது..!

கேரள மாநிலம் ஆலபுழா பகுதிக்கு செல்லும் மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக சேலம் ஜங்சன்ரெயில் நிலைய ஆர்.பி.எப்.போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் ஆர்.பி.எப்.போலீசார், மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகைக்காக ஜங்சன் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயிலில் இருந்து மர்மநபர்கள் யாராவது கஞ்சாவுடன் ஓடினால் அவர்களை பிடிக்க வேண்டி நடைமேடை மற்றும் நுழைவு வாயில், 5 பிளாட் பாரங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். காலை சுமார் 8.15 மணிக்கு … Read more

சத்தீஷ்கரில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆயிரம் கிலோ கஞ்சா கடத்தல்..!

சத்தீஷ்கரில் கஞ்சா கடத்தப் பயன்படுத்திய ஆம்புலன்ஸ் வாகனத்தையும், அதிலிருந்த சுமார் ஆயிரம் கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கோர்பா மாவட்டத்தின் கட்கோரா பகுதியில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அனைத்து விதமான வாகனங்களையும் சோதனை செய்துள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அதையும் போலீசார் சோதனை செய்தபோது, ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டையாக கஞ்சா வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான … Read more