பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை

தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கஞ்சா விற்ற வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்க கோரி,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகளானது நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி புகழேந்தி, ஒருதுறையின் மீது குற்றம் சுமத்தும் போது, அந்த துறை நேர்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த  வேண்டும். தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  அதில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழக காவல்துறையின் சார்பாக 1,386 வழக்குகளில், 26,882 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்ட நீதிமன்றங்களில், 10,918 கிலோ கஞ்சா இருக்கிறது. மீதமுள்ள கஞ்சா தமிழ்நாடு காவல்நிலையங்களில் 13,808 கிலோ கஞ்சாக்கள் இருக்கிறது.

மேலும், தமிழக அரசு தரப்பில், இனிவரும் காலங்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா 3 மாதத்திற்குள் அளிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை காவலனியங்களில் வைக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.