12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்..!

tn govt

திருவண்ணாமலை, சேலம், தென்காசி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனும், சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொகுதி பங்கீடு: திமுக, காங்கிரஸ் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை…! … Read more

தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு!

tamilnadu government

தமிழ்நாடு முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது உத்தரவில், ‘நாராயண சர்மா செங்கல்பட்டு சார் ஆட்சியராகவும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் ஆட்சியராக திவ்யான்சு நிகம் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் சார் ஆட்சியராக பொன்மணி, பொள்ளாச்சி சார் ஆட்சியராக கேத்தரீன் சரண்யா, கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார் ஆட்சியராக பிரியங்கா, நாகப்பட்டினம் சார் ஆட்சியராக குணால் யாத, திருவள்ளூர் பொன்னேரி … Read more

தமிழகத்தில் மணல் கொள்ளை.? I.A.S அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்.! தமிழக அரசு வழக்கு.!

Sand Smuggling case - TN Govt - Enforcement Department

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளுவதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் கூறி கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் பல்வேறு தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்க பணம், 1000 கிராம் அளவில் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. இந்த சோதனையை தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை பதிலளிக்கவும், குறிப்பிட்ட 10 மாவட்ட ஆட்சியர்கள் பதில் கூறவும் அமலாகித்துறை சம்மன் அனுப்பியது. ஆட்டோ … Read more

#Transfered:புதுச்சேரி தலைமைச் செயலாளர் டெல்லிக்கு மாற்றம்!

புதுச்சேரியின் தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் ஐஏஎஸ் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் வர்மா ஐஏஎஸ் புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வரும் நிலையில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். அதைப்போல,டெல்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைவர் தர்மேந்திரா ஐஏஎஸ் அருணாச்சல பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதைப்போல,அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் … Read more

#BREAKING: 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழகத்தில் பணியாற்றும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு. கடந்த 2009-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் முகவரி பிரிவு அதிகாரி ஷில்பா சதிஷ் பிரபாகர் உள்பட பணியாற்றி வரும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று மாநில கேடரில் பணியாற்றும் 2006 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, … Read more

தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்த தேமுதிக..!

தேமுதிக சார்பில், தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்து, விஜயகாந்த அவர்கள் ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்துகள் விவரங்களை வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் திரு.இறையன்பு அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பிற்கு தேமுதிக சார்பில், தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்து, விஜயகாந்த அவர்கள் ட்வீட் செய்துள்ளார். … Read more