தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்த தேமுதிக..!

தேமுதிக சார்பில், தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்து, விஜயகாந்த அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்துகள் விவரங்களை வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் திரு.இறையன்பு அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு தேமுதிக சார்பில், தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்து, விஜயகாந்த அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்துகள் விவரங்களை வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும், என அறிவுறுத்தியுள்ள தலைமைச் செயலாளர் திரு.இறையன்பு IAS அவர்களுக்கு தேமுதிக சார்பில் நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.