அசத்தலான மீன் ரோஸ்ட் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன்களை விரும்பி சாப்பிடுகிறோம். மீன்களை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுகிறோம். தற்போது இந்த பதிவில், மீன் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மீன் – அரை கிலோ மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மிளகு தூள் – 2 டீஸ்பூன் தனியா தூள் – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் … Read more

இந்தியன் 2 படத்தில் இணையும் பிரபலங்கள்!

இந்தியன்- 2 திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வேலைகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சித்தார்த்தும், நடிகை பவானி சங்கரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவுடன் கைகோர்க்கும் இயக்குனர் பா.ரஞ்சித்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா புதிய கல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கும் பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், சிலர் இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் கருத்துக்கு, இயக்குனர் … Read more

#BREAKING :தமிழகத்திற்கு இரண்டு புதிய மாவட்டங்கள்- முதல்வர் அறிவிப்பு !

இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக  முதலமைச்சர் எடப்பாடி  , தமிழக சட்டப்பேரவை விதி 110-கீழ் செங்கல்பட்டு , தென்காசி  புதிய மாவட்டங்களாக அறிவித்தார். நெல்லையில் இருந்து தென்காசியையும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் பிரித்து புதிய இரண்டு மாவட்டங்களாக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்தார். தமிழகத்தில் ஏற்கனவே புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு ,தென்காசி இரண்டு புதிய மாவட்டங்களாக  அறிவிக்கப்பட்டதால் தற்போது தமிழகத்தில் 35 மாவட்டங்களாக மாறி உள்ளது.மேலும் புதிய இரண்டு … Read more

விமானத்திலேயும் விளையாடும் குட்டிநடிகர்! குறும்புக்கார குட்டி நடிகரின் வைரலாகும் வீடியோ!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் தனது திறமையான பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அஸ்வத்ந் விமானத்தில் விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/B0DBRm9h5uE/?utm_source=ig_web_copy_link

நாளை கோலாகலமாக திண்டுக்கல்லில் தொடங்குகிறது டி .என்.பி .எல் போட்டி!

தமிழகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த கிராமப்புற மற்றும் மாவட்ட வீரர்களை விளையாடக்கூடிய அளவிற்கு டி .என்.பி .எல் போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டிகள் மூலம் பல புதிய வீரர்களை உருவாக்கும் தளமாக உள்ளது. 4-ம் ஆண்டு டி .என்.பி .எல் போட்டிக்கான ஏல நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 45 வீரர்கள் 28 மாவட்டங்களை சார்ந்தவர்கள்.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த முறை 5 மாவட்ட வீரர்களை தேர்வு செய்து உள்ளது. இந்த டி .என்.பி .எல் போட்டிக்கு கடந்த … Read more

இன்று கறுப்பின தலைவரான நெல்சன் மண்டேலா பிறந்தநாள்!

கறுப்பின மக்களின் வாழ்க்கையில், வெற்றியின் சூரியனாய் உதித்தவர் நெல்சன் மண்டேலா. இவர் 1918-ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில், ஜூலை 18-ம் நாள் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்களின் தலைவர் ஆவார். நெல்சன் மண்டேலா இளம் வயதிலேயே ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு, தனது பள்ளி படிப்பை தொடர்ந்தார். இவர் போர் புரியும் கலைகளையும் பயின்றுள்ளார். இவர் சட்டக்கல்வி பயின்றுள்ளார். ஒரு தங்க சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றியுள்ளார். பின் … Read more

மீண்டும் அரசியல்வாதியாக களமிறங்கிய விஜய் ஆண்டனி !

விஜய் ஆண்டனி இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில்  நடித்த திரைப்படம் “எமன்” இப்படத்தில் இவர் அரசியல்வாதியாக நடித்து இருந்தார்.இந்நிலையில் விஜய் ஆண்டனி  அடுத்த படத்தில் மீண்டும் அரசியல்வாதியாக நடிக்க உள்ளார். இப்படத்தை “மெட்ரோ ” , ” ஆள் ” ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணா இயக்க உள்ளார்.இப்படத்தை டி .டி ராஜா தயாரிக்க உள்ளார். டி .டி ராஜா தயாரிப்பில் இது நான்காவது திரைப்படம் இதற்கு முன்  “ஜாம்பவான் ”  , ” வல்லக்கோட்டை … Read more

#BREAKING : சந்திரயான்-2 விண்கலம் வரும் 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும்-இஸ்ரோ அறிவிப்பு

சந்திராயன் 2 விண்கலம் ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிலாவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி  சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில்  ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் அன்று  ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ … Read more

7 பேர் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலை வழக்கில் கைது செய்பட்ட முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது. ஆனால் 6 மாத காலமாகியும் இந்த தீர்மானத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆதலால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, ‘ ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரமும், அழுத்தம் கொடுக்கும் … Read more