இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட். இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்று தனது 80வது அகவையில் அடியெடுத்து வைக்கும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், தன்னுடைய இசையால் தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவருமான இசைஞானி திரு.இளையராஜா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! … Read more

மாநிலக் கல்வி கொள்கை – குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

மாநில கல்விக்கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மாநில கல்விக்கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும். உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரிளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும். வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் சமத்துவமான கல்வி தரப்பட வேண்டும் தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை … Read more

#BREAKING : காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி…!

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நேஷனல் ஹீராலாடு விவகாரத்தில், ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக  சோனியா காந்திக்கு மலாக்கத்துறை நோட்டீஸ்அனுப்பியிருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. .

எப்போதும் என் அன்புக்குரிய தங்கையான தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய … Read more

தெலுங்கானா ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்…!

தெலுங்கானா ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட். தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர்(கூடுதல் பொறுப்பு) டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், … Read more

IDBI Bank Recruitment 2022 : டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

IDBI வங்கி, எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. IDBI வங்கி, எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுடையவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் : வேலை : எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவி காலிப்பணியிடங்கள் : 1544 வயது வரம்பு : எக்ஸிகியூட்டிவ்  – 20-25, உதவி மேலாளர் – 21-28 கல்வி தகுதி : டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் … Read more

தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலா – ஜூன் 4-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!

சென்னையில் முதன்முறையாக கார்டிலியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். கடந்த மாதம் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் விளக்கம் அளித்தார். அப்போது சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த … Read more

2-வது நாளாக 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

2-வது நாளான இன்றும் 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல் நாளான நேற்று 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 2-வது நாளான இன்றும் 19 துறைகளின் … Read more

ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் நூதன மோசடி…! ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவு…!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடி ஈடுபட்டதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக விசாரிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு ஈரோடு ஆட்சியர் உத்தரவு.  இன்று மோசடியில் பலர் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு நூதனமான வழிகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். வாட்சப்பில் ஈரோடு ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து, அதிகாரிகளின் வாட்சப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். … Read more

மலர் கண்காட்சிக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு…!

சென்னையில் நாளை மலர்கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைக்கிறார். கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நாளை மலர்க்கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைக்கிறார். கலைவாணர் அரங்கில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில், கண்காட்சி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் கலந்து கொள்வோர் கட்டணம் செலுத்தி பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  … Read more