நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

priyanka gandhi modi

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனிடையே வேட்பாளர்கள் புயலாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பிரச்சாரத்தில் … Read more

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சண்டௌலியில் ராகுல் காந்தி இன்று பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்ளும் நிலையில் அதில் தனது சகோதரரருடன் இணைந்து கொள்ள பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்த போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் இன்று … Read more

பணமோசடி வழக்கு.. குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்..!

தொழில் அதிபர் சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு போன்று பல குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை, சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரியில் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், ஹரியானாவில் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்திவுடன் அவரது கணவர் ராபர்ட் வத்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் , தொழிலதிபர் சஞ்சய் … Read more

தெலுங்கானா முதல்வராகும் ரேவந்த் ரெட்டி.! விழா ஏற்பாடுகள் தீவிரம்.!

Congress MP Rahul gandhi - Telangana CM Revanth Reddy

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதுவும் தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்து கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்க … Read more

பிரதமர் மோடியின் ரூ.21 கோயில் காணிக்கை.., காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியது என்ன.?

PM Modi - Congress MP Priyanka Gandhi

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ தேவநாராயண் ஜியின் 1111வது  நினைவேந்தலில் கலந்து கொண்டார். அப்போது கோவில் காணிக்கையாக ஒரு தொகையினை செலுத்தினார். இந்த காணிக்கை விவரத்தை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 25இல் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதை அடுத்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த அக்டோபர் 20ஆம் தேதி … Read more

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து.. பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ்..!

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு வரும் திங்கள்கிழமை மாலைக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் பதிலளிக்கவில்லை என்றால் எதுவும் சொல்ல முடியாது என்று கருதுவதாகவும், மீண்டும் தொடர்பு கொள்ளாமல் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. கடந்த அக்டோபர் 21 அன்று ராஜஸ்தான் … Read more

அரிதான புகைப்படங்களை ரிலீஸ் செய்து ராக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா.!

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் டிவிட்டர் தளத்தில் குழந்தை பருவ புகைப்படங்களை  வெளியிட்டு தங்கள் ராக்ஷச பந்தன் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.  இன்று இந்தியா முழுவதும் ராக்ஷச பந்தன் தினம் கொண்டாடாடுகிறது. அதாவது அண்ணன் – தங்கை தினமாக இது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பலரும் சகோதர , சகோதரிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும், தங்கள் … Read more

பிரியங்காவுக்கு கொரோனா.! ராகுல் காந்திக்கு உடல்நல குறைவு.! ராஜஸ்தான் பயணம் ரத்து.!

இன்று ராஜஸ்தான் வரவிருந்த, ராகுல் காந்தி உடல் நலக்குறைவு காரணமாக தனது பயணத்தை ரத்து செய்து உள்ளார்.  சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரான ப்ரியங்கா காந்தி தனக்கு மீண்டும் கொரோனா வந்துவிட்டதாக டிவிட்டரில் தெரிவித்து இருந்தார். இதனால் அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.  இந்நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவரான ராகுல் காந்தி இன்று ராஜஸ்தான் செல்ல வேண்டி இருந்தது. அங்கு அவரது கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார். … Read more

தடை மீறி போராட்டம்… ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்தியும் கைது..!

தடை மீறி போராட்டம் நடத்தியதாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார்.  விலைவாசி உயர்வு,  மற்றும் பணவீக்கம் அதிகரிப்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வந்தனர். டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் , தடை மீறி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். … Read more

பாஜக தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரியங்கா காந்தி..!

உத்தர பிரதேச தேர்தல் பரப்புரையின் போது பாஜக தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக 58 தொகுதிகளுக்கும், 2 வது கட்டமாக 55 தொகுதிகளுக்கும் , 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில்,  உத்தரப்பிரதேச சட்டசபை … Read more