தடை மீறி போராட்டம்… ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்தியும் கைது..!

தடை மீறி போராட்டம் நடத்தியதாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார். 

விலைவாசி உயர்வு,  மற்றும் பணவீக்கம் அதிகரிப்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வந்தனர்.

டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் , தடை மீறி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரான பிரியங்கா காந்தியும் அவருடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சிக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாலை அவர்கள் விடுவிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால், நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் 144 தடை போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment