அரிதான புகைப்படங்களை ரிலீஸ் செய்து ராக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா.!

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் டிவிட்டர் தளத்தில் குழந்தை பருவ புகைப்படங்களை  வெளியிட்டு தங்கள் ராக்ஷச பந்தன் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர். 

இன்று இந்தியா முழுவதும் ராக்ஷச பந்தன் தினம் கொண்டாடாடுகிறது. அதாவது அண்ணன் – தங்கை தினமாக இது கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, பலரும் சகோதர , சகோதரிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும், தங்கள் உடன்பிறப்பை பற்றி புகைப்படங்கள் பகிர்ந்துள்ளனர்.

அதில் சிறு வயதில் தங்கள் அப்பாவும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி மற்றும் அவர்களது அம்மா சோனியா காந்தி உடன் இருக்கும் சிறிய வயது குழந்தை பருவ புகைப்படங்களை பகிர்ந்து, தனது ராக்ஷச பந்தன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment