8 லட்சம் பெண்களுக்கும், 20 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு – காங்கிரஸ்

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கூட்டாக வெளியிட்டனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதன்பின் பேசிய ராகுல்காந்தி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு … Read more

பிரதமர் வருகையின் பொழுது கூட்டம் கூட்டுவதற்கு உ.பி அரசு பொது பணத்தை செலவிடுகிறது – பிரியங்கா காந்தி!

பிரதமர் வருகையின் பொழுது கூட்டம் கூட்டுவதற்கு தான் உத்தர பிரதேச அரசு பொது பணத்தை செலவிடுகிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல கிராமத்தில் பாஜக மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. கொரோனா ஊரடங்கின் பொழுது கால்நடையாக சென்ற தொழிலாளர்களுக்கு … Read more

மாயாவதியின் தாயார் மரணம் : நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பிரியங்கா காந்தி!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தாயார் உயிரிழந்துள்ள நிலையில், பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமாகிய மாயாவதி அவர்களின் தாய் ராம்ரதி அவர்கள் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இன்று மாயாவதியின் தாயாருக்கு இறுதி சடங்கு டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், லக்னோவில் இருந்து மாயாவதி … Read more

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது – பிரியங்கா காந்தி!

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பாபு பவனில் உள்ள அதிகாரி ஒருவரிடம் வேலை பார்த்த பெண்ணை,  பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான செய்திகள் அதிக அளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தற்போது இது குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

விவசாயி லவ்ப்ரீத்தின் வீட்டிற்கு சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி;நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரகம் தொடரும்-ராகுல் காந்தி

லக்கிம்புரி கெரி வன்முறையில் உயிரிழந்த விவசாயி லவ்ப்ரீத்தின் குடும்ப உறுப்பினர்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது லவ்ப்ரீத்தின் குடும்பத்தினருடன் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டனர், இது பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி நீதி கிடைக்காத வரை, இந்த சத்தியாகிரகம் தொடரும்.உங்கள் தியாகத்தை மறக்க மாட்டேன், லவ் ப்ரீத் என்று பதிவிட்டுள்ளார். शहीद लवप्रीत के परिवार से मिलकर दुख बाँटा लेकिन जब … Read more

Breaking:விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூர் செல்ல ராகுல்,பிரியங்கா காந்திக்கு அனுமதி..!

லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே விவசாயிகள் நான்கு பேரும், பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து,லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து … Read more

தடுப்பு காவலில் பிரியங்கா காந்தி;மொபைல் இணைய சேவைகள் நிறுத்தம்..!

பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சீதாபூரில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவர்களின் மகனுடைய கார் மோதியதில் 4 பேர் மற்றும் கலவரத்தில் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இதனால்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. இதனைத் தொடர்ந்து,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவசாயிகளை … Read more

“பிரியங்கா காந்தியை உடனே விடுதலை செய்க”- விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்..!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் பாஜக வன்முறை என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற காங்கிரஸ் … Read more

“பிரியங்கா காந்தி கைது;சட்டவிரோதமானது, முற்றிலும் வெட்கக்கேடானது” – முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்..!

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  கைது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் … Read more

#BREAKING: நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிரியங்கா காந்தி மீது வழக்கு பதிவு..!

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பிரியங்கா காந்தி உள்ளிட்ட 11 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 28 மணி நேரமாக வழக்குப்பதிவு செய்யாமல் அடைத்து வைத்திருப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது … Read more