கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை..! உ.பி அரசு அதிரடி உத்தரவு.! 

உத்தர பிரதேசத்தில் உள்ள ஜிபி நகரில் ஜனவரி 2ஆம்  தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, கௌதம் புத்த நகரில் (ஜிபி நகர்) கொரோனா வைரஸ் தடுப்பிற்காக போடப்பட்ட தடை உத்தரவை தொடர்ந்து நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் 144 தடை உத்தரவானது வரும் வருடத்தில் ஜனவரி  2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட இந்த … Read more

உ.பி.யில் பயங்கர தீ விபத்து.. 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

உ.பி.யில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் காயம். உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 64 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் அடங்குவர் எனபதோஹி டிஎம் கவுரங் ரதி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் … Read more

தலித் மாணவர் மரணம்.. வன்முறை போராட்டத்தில் அவுரியா மக்கள்.. ஆசிரியர் தலைமறைவு!

தலித் மாணவர் மரணம் தொடர்பாக உ.பி.யின் அவுரியாவில் வன்முறைப் போராட்டம். ஆசிரியர் தப்பி ஓடியதாக குற்றம் சாட்டு. உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தலித் மாணவர்(15) தேர்வின் போது ஒரு வார்த்தையை தவறாக உச்சரித்ததால், ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து வன்முறை போராட்டங்கள் நடந்தன. வன்முறை போராட்டத்தின் போது தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்கள் பதிவாகி, இரண்டு போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் … Read more

#Justnow:பரபரப்பு…உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிஹாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் இருந்து லக்னோ நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து,வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் கவுஷல்ராஜ் சர்மாவை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் PTI கூறுகையில்:”உபி முதல்வர் யோகி சனிக்கிழமை வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.அதன்பின்னர்,வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை … Read more

உ.பி முதல்வர் உத்தரவின்பேரில் 17,000 மதவழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் ஒலி குறைப்பு …!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக முதல்வரின் உத்தரவின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மற்றும் இரைச்சல் வரம்பை மீறி அதிக அளவு ஒலி எழுப்பி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 30ம் தேதிக்குள் இது தொடர்பான பட்டியலை தயாரித்து அனுப்புமாறு காவல் நிலையங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி பின், சட்டவிரோதமாக உள்ள ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்பொழுது உத்தர பிரதேச முதல்வர் … Read more

#Shock:’உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்’ – அதிகாரியால் தற்கொலை செய்த மின்ஊழியர்!

உ.பி:’உங்களுக்கு இடமாற்றம் வேண்டுமானால் உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்’ என்று கேட்ட அதிகாரியால் மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில்,தனது மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள் என்று கூறிய பொறியாளரின் வீட்டிற்கு வெளியே மின் கழக ஊழியர் ஒருவர் தீக்குளித்து இறந்துள்ளார். உபி காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் படி,லக்கிம்பூரின் மின்துறையில் பணிபுரியும் மின் ஊழியரான கோகுல் (42) என்பவர், வேலைக்கு சென்று வர தனக்கு அதிக நேரம் … Read more

#hack:ஹேக் செய்யப்பட்ட முதல்வர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கு!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக(UP CMO) ட்விட்டர் கணக்கு சனிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது.உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கின் சுயவிவரப் புகைப்படம் கார்ட்டூனிஸ்ட் குரங்காக மாற்றப்பட்டு, “How to turn your BAYC/MAYC animated on Twitter” என்ற டுடோரியலில் அந்த இடுகை வெளியிடப்பட்டதால் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் வெளிச்சத்திற்கு வந்தது.இருப்பினும்,தற்போது கணக்கு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு 4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள நிலையில்,ஹேக் செய்யப்பட்ட உபி சிஎம்ஓ … Read more

#Breaking:லக்கிம்பூர் விவகாரம்:.5,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்…முக்கிய குற்றவாளி யார்?..!

உத்தரப் பிரதேசம்:லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உ.பி.காவல்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா பெயர் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.அதன்பின்னர்,நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். … Read more

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையர்..!

உத்தரப்பிரதேசத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆராய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் 3-நாள் பயணமாக உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர். இன்று உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தை … Read more

“பிரியங்கா காந்தி கைது;சட்டவிரோதமானது, முற்றிலும் வெட்கக்கேடானது” – முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்..!

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  கைது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் … Read more