திமுக எம்.பி. கனிமொழி மீட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

Kanimozhi

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது.  இந்த வெள்ளத்தால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்தனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்து உணவுகளை வழங்கி வருகிறார். தனது சொந்த நிதியில் இருந்து தினமும் சாப்பாடுகளை செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். தூத்துக்குடி மட்டுமின்றி எம்பி கனிமொழி கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளத்தால் சிக்கி … Read more

துப்பாக்கி கூட எடுத்து வர முடியும்.. பாதுகாப்பில்லாத சூழல்.! கனிமொழி எம்.பி காட்டம்.!

DMK MP Kanimozhi says about Parliament Security Breaches

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் மக்களவைக்குள் உள்ளே குதித்தனர். அவர்கள் காலில் மறைத்து வைத்து இருந்த வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதே நேரத்தில் வெளியில் ஹரியானாவை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தின் … Read more

ஒரேநாளில் கனிமொழி உட்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

MPs suspended

நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் நேற்று அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர் கோஷங்களை எழுப்பி, தங்கள் கைகளில் இருந்த வண்ண புகை குப்பிகள் வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று, ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர். இந்த சூழலில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் … Read more

அரசியல் ரீதியாக தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது..! – கனிமொழி எம்.பி

Kanimozhi

திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு! 5 ஆண்டுகளுக்கு பின் … Read more

மீனவர் தின ஸ்பெஷல்… கொடியசைத்த எம்பி கனிமொழி.! சீறிப்பாய்ந்த தூத்துக்குடி படகுகள்.!

மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகரில் படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியை எம்பி கனிமொழி கொடியசைத்து தோடங்கி வைத்தார்.   நேற்று உலகம் முழுக்க மீனவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்த மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சிறிய ரக மோட்டார் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தூத்துக்குடி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த … Read more

ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே மத்திய அரசுப்பணி தேர்வுகள்.! திமுக எம்.பி கனிமொழி கடும் கண்டனம்.!

மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அறிவித்தது குறித்து தனது கண்டனத்தை திமுக எம்பி கனிமொழி பதிவு செய்துள்ளார்.  மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL எனும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இந்த தேர்வுகள்  நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது . இது குறித்து திமுக எம்.பி கனிமொழி டிவிட்டர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். … Read more

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி..!

கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநில தேர்தல் அதிகாரியாக, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என பல தேர்தல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல்களி சிறப்பாக நடத்தி முடிக்க, தேசிய தேர்தல் ஆணையம் மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளை நியமித்திருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் சிறப்பாக … Read more

தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு – திமுக எம்.பி கனிமொழி கண்டனம்!

தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்ததற்கு மத்திய அரசை கண்டித்து திமுக எம்.பி கனிமொழி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.  குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு கோரப்பட்ட தமிழகத்தின் ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய … Read more

பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் – கனிமொழி எம்.பி..!

பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2020-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 18-லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். சமீபத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கான நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை – கனிமொழி எம்பி ட்வீட்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு கனிமொழி கோரிக்கை. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து 2 படகுகளும் பறிமுதல் செய்துள்ளது. இதுவரை மொத்தம் 55 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 12 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது. தமிழக மீனவர்வகளை இலங்கை கடற்படை கைதை … Read more