பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் – கனிமொழி எம்.பி..!

பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2020-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 18-லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். சமீபத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவை கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கான நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக பா.ஜ.,வை சேர்ந்த வினய் சஹஸ்ரபுத்தி உள்ளார்.

பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முக்கிய மசோதாவை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவில் உள்ள 31 உறுப்பினர்களில்  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் மட்டுமே பெண் எம்.பி.யாக உள்ளார்.

இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி கூறும்போது, 110 பெண் எம்.பி.கள் உள்ளபோது பெண்களுக்கான திருமண வயதை 21-ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரில் 30 பேர் ஆண்கள்; பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan