ஆபாச பட நடிகை சோபியா லியோன் 26 வயதில் மரணம்..! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

Sophia Leone Death: உலக அளவில் பிரபலமான ஆபாசப் பட நடிகை சோபியா லியோன் தனது 26வது உயிரிழந்தார், வீட்டில் இருந்து அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டில், ஆபாச படங்களில் நடித்து வந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், 4-வது நபராக சோபியா லியோனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More – காசாவுக்கு நல்லது செய்ய நினைத்த அமெரிக்கா…5 பேர் உயிரை காவு வாங்கிய பாராசூட்.! அமெரிக்காவின் மியாமி நகரை … Read more

திமுக எம்எல்ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! FIR-ல் வெளியான தகவல்கள்

திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகியுள்ளது. உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை, குடும்ப சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர். திருவான்மியூரில் வசித்து வந்த … Read more

குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் – விசாரணை குழு அமைப்பு

Baby

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதிமசூத் – சௌமியா. இவர்கள் மிக்ஜாம் பாதிப்பின் போது கடந்த 6-ஆம் தேதி சௌமியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவரது கணவன் மற்றும் உறவினர்கள் அழைத்து சென்றனர். அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சௌமியாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மருத்துவமனையின் பிணவறை பணியாளர்கள் இறந்த குழந்தையை துணி சுற்றாமல் … Read more

அதிமுக நிவாரண உதவி கூட்டத்தில் சிறுமி உயிரிழப்பு.. ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு!

RDO

சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் கொருக்குப்பேட்டையில் நேற்று முன்தினம்  நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிவாரணப் பொருள்கள் பெறுவதற்காக ஏராளமானோா் வரிசையில் காத்து நின்றனா். அதில், நிவாரண பொருட்கள் வாங்க வந்த தண்டையாா்பேட்டை சாஸ்திரி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த யுவஸ்ரீ (14) என்ற சிறுமி ஒருவர் காத்திருந்தாா். நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து சென்றுவிட்டார். அப்போது, நிவாரண பொருட்கள் வாங்க கூட்ட நெரிசலில் வரிசையில் நின்றிருந்த … Read more

மீண்டும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரிவரித்துறை சோதனை!

EV Velu

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரிவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஆய்வு செய்து வருகிறது வருமான வரித்துறை. அதன்படி, அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று … Read more

முன்னாள் எம்பி மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பம்.. 5 பேரை பிடித்து விசாரணை!

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் காவல்துறை விசாரணை என தகவல். மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணை தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்தான் மரண வழக்கில் 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் எம்பி மஸ்தான் கடந்த 22ம் தேதி காரில் சென்றபோது நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தற்போது 5 பேரை பிடித்துச்சென்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து … Read more

கோடநாடு வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்த தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மறைந்த முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, தினேஷ் வீட்டில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவை கார் வெடி விபத்து – மீண்டும் நாளை விசாரணை!

கோவை கார் வெடி விபத்து வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணை. கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது. கோவை கார் வெடி விபத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு … Read more

ரயில் முன் தள்ளி மாணவி கொல்லப்பட்ட வழக்கு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

ரயில் முன் தள்ளி மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ஆகிய இருவரும் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், எதிரில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் சிக்கி மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த … Read more

அதிமுக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி விசாரணை!

அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிசிடி போலீசார் விசாரணை.  அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூலை 11-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வன்முறை தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி மகாலிங்கம் விளக்கமளித்து வருகிறார். கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளை … Read more