கோவை கார் வெடி விபத்து – மீண்டும் நாளை விசாரணை!

கோவை கார் வெடி விபத்து வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணை.

கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது. கோவை கார் வெடி விபத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என அறிவித்த நிலையில், 5 பேரையும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். விசாரணை மனுவை மீண்டும் நாளை விசாரிப்பதாக நீதிபதி இளவழகன் தெரிவித்ததையடுத்து 5 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவலில் எடுத்து விசாரணை செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment