திருச்சி : 100 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

திருச்சியில் விதிகள் மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே ஒரு கிராமத்தில் 51 சென்ட் நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு விதிகள் மீறி கட்டப்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சண்முகசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், விதிகள் மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும் என … Read more

43 மூட்டை.. 7 லட்சத்திற்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருள்.! திருச்சியில் தீவிர வேட்டை.!

திருச்சி மாவட்டம் வளநாடு எனும் ஊரில் 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை நீடித்து வருகிறது. அதனை விற்க தடை நீடிக்கிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனையில் கிலோ கணக்கில் அவற்றை பறிமுதல் செய்து கைது நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி தான் தற்போதும் ஓர் அதிரடி வேட்டை நடத்தப்பட்டுள்ளது.  திருச்சி மாவட்டம் வளநாடு எனும் ஊரில் அதிக அளவில் குட்கா … Read more

வங்கி ஊழியரை காரில் கடத்தி 12 லட்சம் கொள்ளை.! மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தாத்தையங்கார் பேட்டை என்ற தா.பேட்டை பகுதில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கனரா வங்கியில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி இறந்துவிட்டார். குழந்தையில்லை. இவர் மட்டும் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தனியாக தா.பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முத்துசாமியை மர்ம நபர்கள், காரில் கடத்தி, இரவு முழுவதும் வீட்டு சாவியை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அவரது … Read more

இன்று திருச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பல்வேறு துறைகளில் ஏற்கனவே முடிவுற்ற 203 திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும்,  புதிதாக 532 பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். அதுமட்டுமல்லாமல் 327 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைகளின் கீழ் சுமார் 40,344 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்வில் … Read more

நாளை திருச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். அங்கு தயானூர், திருச்சிராப்பள்ளியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் 303 முடிவுற்ற நலத்திட்ட பணிகள், 532 அடிக்கல் நாட்டும் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் 40,344 பேர் பயன்பெறுகின்றனர். இந்த நிகழ்வில் செயல்படுத்தப்படவுள்ள நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பீடு ரூ.1084.80 கோடி ஆகும்.

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

திருச்சி:பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியரான சரவணன் என்பவர், தற்கொலை செய்து கொண்டது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்,வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த நவ.19 ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் … Read more

கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்;ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவியை அவரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு. பூமிநாதன் அவர்கள் 21-11-2021 அன்று அதிகாலை ஆடுகள் திருடும் கும்பலை இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று கீரனூர் அருகே மடக்கி பிடித்தபோது, காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஆடுகள் திருடும் கும்பல் காவல் துறை … Read more

பாடத்திட்டங்களை முடிக்கவே சிறப்பு வகுப்புகள்…! – அமைச்சர் அன்பில் மகேஷ்

சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடததப்படுவது, பாடத்திட்டங்களை முடிப்பதற்காக தான். இது பழைய நடைமுறை தான். இருப்பினும் இந்த நடைமுறை படிப்படியாக தளர்த்தப்படும். திருச்சி : திருச்சி பொன்மலைப்பட்டியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், குழந்தைகள் மீதான பாலியல் தடுப்பு தினமான வரும் 19-ஆம் தேதி, சென்னையில் சிறப்பு நிகழ்வு ஒன்று நடத்தப்படவுள்ளது. ஆசிரியர் கலந்தாய்வு விதிமுறைகள் அடுத்த … Read more

நாளை டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு நடத்த விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். திருச்சி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக … Read more

திருச்சி படைக்கலத் தொழிற்சாலை தயாரித்த துப்பாக்கிகள் சி.ஆர்.பி.எப்., படை டி.ஐ.ஜி., ராவத்திடம் ஒப்படைப்பு…

 படைக்கலத் தொழிற்சாலை திருச்சி என அழைக்கப்படும் இந்திய அரசின் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலை ஆகும். இது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் இயங்கும் 41 படைக்கலத் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இது 3 ஜூலை 1966 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்த தொழிற்ச்சாலையில் உற்பத்தி 1967ல் ஆரம்பமானது. இங்கு, மத்திய மற்றும் மாநில போலீஸ் பாதுகாப்பு படையினருக்கான, பல்வேறு ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்படுகின்றன. இந்நிலையில், … Read more