பரபரப்பு : கேரள முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி..!

கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் பாதுகாப்பு அதிகாரி வைத்திருந்த துப்பாக்கி வெடித்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் பாதுகாப்பு அதிகாரி வைத்திருந்த துப்பாக்கி திடீரென வெடித்துள்ளது. பாதுகாப்பு அதிகாரி சுத்தப்படுத்தும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பு : மருமகளை சுட்டு கொன்ற மாமனார்..! நடந்தது என்ன..?

மகாராஷ்டிராவில் காலை உணவு தர தாமதமானதால், ஆத்திரத்தில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாமனார்.  மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சீமா ராஜேந்திரா(42) என்ற பெண்மணி தனது காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தொழிலதிபரான காசிநாத் பாட்டில் என்பவர் தனக்கு காலை உணவு தருவதற்கு தாமதமானதால் கோபமடைந்து அவர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் மருமகளை சுட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருந்த  நிலையில் அந்த பெண்ணை உடனடியாக … Read more

தனது பிறந்தநாளில் துப்பாக்கியால் வானத்தில் சுட்ட பெண் மீது வழக்கு பதிவு

பெண் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் தனது வீட்டின் முன் ஒரு குறுகிய தெருவில் சிவப்பு மற்றும் நீல அலங்கார விளக்குகள் எரிகிறது. அப்போது ஒரு பெண் நடனமாடி கொண்டே பொது இடத்தில் கையில் துப்பாக்கியுடன் வானத்தை நோக்கி சுடுகிறார்.  இந்த வீடியோ ட்விட்டரில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோவை அடிப்படையாகக் … Read more

கர்நாடகா:தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தந்தை…மகனுக்கு நேர்ந்த கொடூரம்..!

கர்நாடகாவில்,சம்பளம் கேட்டு தகராறு செய்த தொழிலாளர்களை நோக்கி தந்தை துப்பாக்கியால் சுட்டதில் குறி தவறி மகன் மீது குண்டு பாய்ந்தது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் பாண்டேஸ்வர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மோர்கன்ஸ்கேட் பகுதியை சேர்ந்த ராஜேஸ் பிரபு என்பவர் பார்சல் மற்றும் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார்.இவர்,கடந்த சில மாதங்களாக ராஜேஸ் தன்னிடம் வேலை செய்து வரும் டிரைவர்கள், கிளீனர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து,நேற்று மாலை அங்கு வந்த ஒரு டிரைவரும், கிளீனரும் அலுவலகத்தில் … Read more

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ…!

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட உதவி காவல் ஆய்வாளர்.  செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலகோட்டையூர் பகுதியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் கவுதமன் (59). இவர் விஐபிகளுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இதையடுத்து சென்னை நீதிபதி ஒருவருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பின் இவர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் … Read more

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங்…துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார்,மொஹாலியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேசிய துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் பயிற்சியாளரான நமன்வீர் சிங் பிரார் (வயது 29), திங்கள்கிழமை அதிகாலை மொஹாலியின் செக்டர் 71 இல் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டைக் கேட்டதும், குடும்ப உறுப்பினர்கள் அவரை மொஹாலியின் 6 வது கட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு … Read more

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உட்பட 4 பேர் பலி..!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உட்பட 4 பேர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அங்குள்ள லேக்லேண்டில் இருக்கும் இரண்டு வீடுகளில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் கைக்குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை மீண்டும் பலமுறை சுட்டு கொன்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையுடன் நடைபெற்ற மோதலில் ஒருவர், … Read more

சமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் வீடியோ வெளியிட்ட பெண் காவலர் சஸ்பெண்ட்…!

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  பெரும்பாலும் தற்பொழுது அரசு பணிகளில் இருக்கக்கூடிய ஊழியர்கள் முதல் சாதாரண கூலித் தொழில் செய்யக்கூடிய நபர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அரசு பணிகளை செய்யக்கூடிய ஊழியர்கள் சில சமயங்களில் இதனால் சிக்கலில் மாட்டி விடுகின்றனர். தற்பொழுதும் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பெண் போலீஸ்  … Read more

திருச்சி படைக்கலத் தொழிற்சாலை தயாரித்த துப்பாக்கிகள் சி.ஆர்.பி.எப்., படை டி.ஐ.ஜி., ராவத்திடம் ஒப்படைப்பு…

 படைக்கலத் தொழிற்சாலை திருச்சி என அழைக்கப்படும் இந்திய அரசின் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலை ஆகும். இது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் இயங்கும் 41 படைக்கலத் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இது 3 ஜூலை 1966 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்த தொழிற்ச்சாலையில் உற்பத்தி 1967ல் ஆரம்பமானது. இங்கு, மத்திய மற்றும் மாநில போலீஸ் பாதுகாப்பு படையினருக்கான, பல்வேறு ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்படுகின்றன. இந்நிலையில், … Read more

துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு ரூ.4.5 லட்சம் ! யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!

சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத … Read more