70% பேருக்கு கொரோனா தடுப்பூசி – ஐரோப்பிய யூனியன்..!

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இதுவரை 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளில் இதுவரை தற்போது 70% பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தலைவர் உர்சுலா வோண்டேர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஐரோப்பிய யூனியனில் உள்ள 70% பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டிவிட்டோம். இருந்தாலும் இது போதுமானது அல்ல. இன்னும் அதிகமான நபர்களுக்கு … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 3.44 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 3.44 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 57,05,07,750 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 3,44,06,720 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 13,34,620 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில … Read more

இன்று முதல் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும்!

இன்று முதல் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  நேற்று சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பெற்று கொண்டார். அதன் பிறகு சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்பட கூடிய தடுப்பூசி மையத்தை திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து … Read more

50% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்-வெள்ளை மாளிகை..!

அமெரிக்காவில் 50% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் முதல் இடத்தை வகிப்பது அமெரிக்கா. இந்நிலையில் அங்கு தற்போது 50 சதவீத அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் கொரோனா தரவு இயக்குனர் சைரஸ் ஷாபார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்காவில் 50% அமெரிக்கர்கள் முழுமையாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இதே முறையை … Read more

மத்திய அரசு மாநிலங்களுக்கு போதுமான அளவு தடுப்பூசியை வழங்கவில்லை – அபிஜித் பானர்ஜி!

மாநிலங்களுக்கு போதுமான அளவு தடுப்பூசியை வழங்கும் திறன் மத்திய அரசுக்கு இல்லை என அபிஜித் பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் குறைந்துள்ளது. அடுத்ததாக கொரோனா மூன்றாம் அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையை எப்படி கையாள்வது என்பது தொடர்பான உலகளாவிய ஆலோசனைக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நோபல் பரிசு … Read more

2020 ஆம் ஆண்டில் 3 மில்லியன் இந்திய குழந்தைகள் டிடிபி முதல் தடுப்பூசியை பெறவில்லை-உலக சுகாதார நிறுவனம்..!

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மூன்று மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிப்தீரியா-டெட்டனஸ்-பெர்டுசிஸ் என்ற டிடிபி தடுப்பூசியின் முதல் தவணையை பெறவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 3.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிடிபி முதல் தவணையை தவறவிட்டதாகவும், 3 மில்லியன் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசியை பெற தவறியதாகவும் கூறப்பட்டுள்ளது. டிடிபி தடுப்பூசி என்பது மூன்று வகையான தொற்று நோய்களுக்கு எதிராக போடப்படும் தடுப்பு மருந்து. டிப்தீரியா, டெட்டனஸ், … Read more

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி – சீனாவுக்கு அங்கீகாரம் அளித்த WHO!

சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சீன நிறுவனம் சைனோவேக் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகம் முழுவதையும் வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அண்மை காலங்களாக மிக குறைவான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தற்பொழுது பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அது … Read more

தடுப்பூசி போட்ட பின் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

தடுப்பூசி செலுத்திய பின் கொரோனா ஏற்பட்டால் மரணம் நிகழாது என எய்ம்ஸ் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்துவிடும் என தகவல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது புதிய தொற்றுகள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் கொரோனாவை அழிப்பதற்கான ஒரே தீர்வாக தடுப்பூசியை தற்பொழுது நம்பியுள்ளனர். எனவே, பலரும் தடுப்பூசி போடுவதில் … Read more

தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் இல்லை….!

சத்தீஸ்கரில் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் தனது ஊழியர்களிடம் தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ளதால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க அந்தந்த மாநிலங்களில் தளர்வுகளுடன் மற்றும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன் முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.பின்னர்,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயது … Read more

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் -AEFI அறிக்கை..!

இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து தேசிய நோய்த் தடுப்பு ஆய்வுக்குழு (AEFI) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாக பரவி வருவதால்,தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்காக,கோவாக்சின்,கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக நாடு முழுவதும் பொய்யான கருத்து பரவி வருகிறது என்றும் ஆனால்,இந்தியாவை பொறுத்தவரை ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கசிவு போன்ற பக்கவிளைவுகள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது என்றும் … Read more