70% பேருக்கு கொரோனா தடுப்பூசி – ஐரோப்பிய யூனியன்..!

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இதுவரை 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளில் இதுவரை தற்போது 70% பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தலைவர் உர்சுலா வோண்டேர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஐரோப்பிய யூனியனில் உள்ள 70% பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டிவிட்டோம். இருந்தாலும் இது போதுமானது அல்ல. இன்னும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.