மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை – டிடிவி தினகரன் வாழ்த்து

மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் செல்வ பிரபுவுக்கு வாழ்த்துக்கள். U20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செல்வ பிரபு, மும்முறைத் தாண்டுதலில் (triple jumper) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். U20 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய டிரிபிள் ஜம்பர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். செல்வ பிரபு  மும்முறைத் தாண்டுத போட்டியில் 16.15 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை … Read more

திமுகவினர் திருந்தவே இல்லை – டிடிவி தினகரன்

திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம். திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் மறுபடியும் மின்தடை நிகழ்ந்து வருகிறது. விடியல் ஆட்சியில் இருந்த தமிழகம்தான் உருவாகியுள்ளது. திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து விமரித்தார். அம்மா கொண்டுவந்த திட்டங்கள் எதுவும் இல்லை. தாலிக்கு தங்கம் திட்டம் இல்லை, அம்மா உணவகங்கள் மூடப்பட்டு … Read more

#அன்னையர் தினம்:’அம்மா’ என்று சொன்னாலே இவரது உருவம்தான் – டிடிவி தினகரன் வாழ்த்து!

தியாகத்தின் மொத்த உருமாய்,வாழும் தெய்வமாய் நம் அனைவருக்கும் பிடித்தவருமான வார்த்தைகளால் ஒப்பிடமுடியாத அன்னையர்களின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்,நாடு முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால்,தங்களை பெற்ற அன்னையர்களுக்கு பிள்ளைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அதே சமயம்,தாயாக சிறந்து விளங்கும் அனைவருக்கும் அரசியல் தலைவர்களும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தியாகத்தின் திருவுருவமாக இருக்கும் அன்னையர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்னையர் … Read more

#JustNow: டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை!

இரட்டை இலை சின்னத்தை பெற சட்டவிரோதமாக லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தினகரன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அந்தவகையில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே, கடந்த 12-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்த நிலையில், இன்றும் அவரிடம் … Read more

#JustNow: உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் – டிடிவி

தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவோம் என டிடிவி தினகரன் நம்பிக்கை. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் என்பதுதான் எங்களின் கோட்பாடு. தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவோம். கடந்த காலங்களில் தேர்தல் வெற்றி, தோல்விகளை கடந்து வரும்காலத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து செயல்படுவோம். திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்ட … Read more

அம்மாவின் பெயரை நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

முழு உடல் பரிசோதனை மையத்திற்கு நீக்கப்பட்ட அம்மாவின் பெயரை மீண்டும் சூட்டிடவேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கு வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அம்மா அவர்களின் பெயரிலான திட்டங்களை முடக்குவது அல்லது பெயர் … Read more

தீய சக்தி திமுகவை எதிர்த்து அமமுக தொடர்ந்து போராடுகிறது – டிடிவி தினகரன்

மக்கள் நன்மைக்காக தீய சக்தி திமுகவை எதிர்த்து அமமுக தொடர்ந்து போராடுகிறது என டிடிவி தினகரன் பேட்டி. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வதாக மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது என குற்றசாட்டினார். எதையெல்லாம் செய்கிறேன் என்று சொன்னர்களாளோ அதற்கு எதிர்மறையாக ஆட்சி செய்கின்றனர். மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு. எனவே, மக்கள் நன்மைக்காக தீய சக்தி திமுகவை … Read more

“மனச்சாட்சி இல்லாத செயல்;இதுதான் திமுக சொன்ன விடியலா?” – டிடிவி தினகரன் கண்டனம்!

சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான்: அந்த வகையில்,தமிழக எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் … Read more

உடல்நலக்குறைவால் தான் ஜெயலலிதா மரணமடைந்தார் – டிடிவி தினகரன்

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உடல்நலக்குறைவால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தார் என்பது தான் உண்மை. ஜெயலலிதாவின் மரணம் அரசியலாக்கப்பட்டுள்ளது. எந்த முடிவாக இருந்தாலும் ஜெயலலிதாவே எடுத்திருப்பார். தேவையில்லாமல் எங்கள் சித்தி மீது பழிபோட்டு எதோ பண்ணிப் பார்த்தார்கள். அது நடக்கவில்லை. இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகியுள்ளது என்றும் குற்றசாட்டினார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இன்று மீண்டும் தொடங்கியுள்ள … Read more

ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் – டிடிவி தினகரன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கட்சியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுகவும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன். அமமுக தொண்டர்களின் முடிவுதான் என்னுடைய முடிவு. தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. நாங்கள் தவறு செய்யவில்லை. சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பதால் அதிமுகவின் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். தேனி மாவட்ட நிர்வாகிகள் சுயபரிசோதனை செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். … Read more