தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! – நெல்லை ஆட்சியர்

thamirabarani

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல், மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், கனமழை அறிவிப்பை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள … Read more

தாமிரபரணி ஆற்றின் நீர்வழிபாதையில் புதிய திட்டங்கள்… அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு.!

Thamirabarani RIver - Minister AV Velu

தென்மாவட்டத்தில் பெய்த் அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் இருந்த பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி, பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது ஒருசில முக்கிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பினாலும், இன்னும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் … Read more

தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு.! ஆற்றங்கரைக்கு செல்ல ஆட்சியர் தடை.!

நாளை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் தூத்துக்குடி மக்கள் யாரும் செல்லக்கூடாது என தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் / கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்று பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு – பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகமாகி உள்ளது. ஆதலால் சேர்வலாறு – பாபநாசம் பகுதியில் நீர் திறப்பது 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தற்போது வரும் 2500 கனஅடி நீரானது நாளை 15 ஆயிரம் கனஅடி … Read more

“144 ஆண்டு கழித்து நடக்கும் தாமிரபரணி புஷ்கர விழா “வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது..!!!

144 ஆண்டுகளுக்கு பிறகுதாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. குரு பகவான் விருச்சிக ராசிக்கு  பெயர்ச்சி அடையும்போது நடக்கும் நிகழ்ச்சியே மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் ஆலய தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் 144 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மகா புஷ்கரவிழா நடக்கிறது. இந்நிலையில் விழா நடக்கும் 12 நாட்களும் தாமிரபரணி ஆற்றில் ஹோமங்கள், முன்னோர்கள் நினைவு தர்ப்பணம், கோ தானம் உள்பட … Read more

தண்ணீர் எங்கே..?பரிதாபத்தில் நெல்லை மக்கள்..!!

சமீபத்தில் கேரளாவில் கனமழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றது.குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.கனமழை இப்படி கொட்டியும் , வெள்ளம் அருவிகளில் பெருக்கெடுத்து ஓடியும் மேற்குதொடர்ச்சி மலைக்கு சம்பந்தமான தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்தானது அப்படி பேசும்படி இல்லை என்பது மக்களின் கவலையாக இருக்கின்றது. தாமிரபரணி ஆற்றில் வரும் நீரின் அளவுக்கு கரணம் மணல் கொள்ளையாக இருக்கும் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அண்டை மாநிலம் கேரளத்தில் அவ்வளவு மழை பொழிந்து தண்ணீரை காணோம் என்ற தவிப்பில் … Read more

தாமிரபரணி ஆற்றுப்படுகை கண்காணிக்க ஆளிலில்லா 3D விமானம்..!!

தூத்துக்குடி : அத்திமரப்பட்டி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள நீர் நிலைப்பகுதிகளில் வெள்ளம் வரும் பகுதியினை மதிப்பீடு செய்ய ஆளிலில்லா 3D விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார்.