ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் 10 மாகாணத்தில் பாதுகாப்பு படையினருடன் மோதல் இந்த மோதலில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு அமைப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்ட வண்ணம் தான் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலிபான் தளபதி உட்பட 18 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்பொழுது பாக்லான்  மாகாணத்தின் ஜூக்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் … Read more

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவிகள்…!

இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள், வகுப்புகளுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை சிறை பிடித்துள்ளனர். பயங்கரவாதிகளின் அட்டகாசம் பல இடங்களில் பெருகி வரும் நிலையில், நைஜீரியாவில் உள்ள போகோ ஹராம் பயங்கரவாதிகள் அங்கு வாழும் கிராமத்து மக்கள் மத்தியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பது மட்டுமல்லாமல்,  பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளையும் கடத்தி சென்று அவர்களை தற்கொலைப் படை பயங்கரவாதிகளாகவும் மாற்றிவிடுகின்றன. இந்நிலையில் நைஜீரியாவின் வட … Read more

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவல்துறை தளபதி உட்பட 6 அதிகாரிகள் உயிரிழப்பு!

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தளபதி தாஹிர்கான் உட்பட 6 உள்ளூர் போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான நங்கர்ஹாரில், பாடிகோட் மாவட்டத்தில் ஒரு உள்ளூர் போலீஸ் பிரிவினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் மாலை வரை தொடர்ந்தது. இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தளபதி தாஹிர்கான் உட்பட 6 உள்ளூர் போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். கட்டாரி தலைநகர் தோஹாவில் அரசாங்கத்திற்கும் தலிபான் … Read more

ஷோபியன் என்கவுண்டர்.. ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ..!

தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது,  பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தன, இதன் விளைவாக அங்கு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில்,  பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது  என்கவுண்டர் நடந்து வருகிறது. இந்த என்கவுண்டரில் இதுவரை அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். இருப்பினும், 2 ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.

டெல்லியில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை கைது!

டெல்லியின் ஷகார்பூர் பகுதியில், காவல் துறையில் சிறப்புப் பிரிவு பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் இன்று கைது செய்துள்ளது. டெல்லியின் ஷகார்பூர் பகுதியில், காவல் துறையில் சிறப்புப் பிரிவு பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் இன்று கைது செய்துள்ளது. அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி கைது செய்யப்பட்ட ஐந்து பேரில், இருவர் பஞ்சாபை சேர்ந்தவர் என்றும், மீதமுள்ள மூன்று பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் காலிஸ்தான் உடன் தொடர்பு … Read more

ஈராக்கில் கொலை வழக்கில் கைதாகியுள்ள 21 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை!

ஈராக்கில் கொலை வழக்கில் கைதாகியுள்ள 21 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு 2014ம் ஆண்டு ஈராக், சிரியா அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நடுகளில் அதிரடியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இந்த பயங்கரவாத அமைப்பில் இருந்த அப்பாவி மக்கள் மீதும் அரசு படை மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்கு தண்டனை அல்லது வாழ்நாள் ஆயுள் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே மோதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீர் மாநிலம், பக்தாம் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலம், பக்தாம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், அப்பகுதியியல் ரகசிய சோதனை நடத்தினார்கள். அப்பொழுது அங்கிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையும் பதில் தாக்குதல் நடத்தியது. 4 மணி நேரத்துக்கும் மேலாக … Read more

விமானத்தில் பயங்கரவாதி உள்ளதாக பீதியை கிளப்பிய பயணி! அதிர்ச்சியடைந்த சக பயணிகள்!

விமானத்தில் பயங்கரவாதி உள்ளதாக பீதியை கிளப்பிய பயணி. கோவாவுக்கு, டெல்லியில்  இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.  அப்போது அந்த விமானத்தில் பயணித்த, ஜியா -உல்- ஹக் என்பவர் எழுந்து நின்று, தான் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவின் அதிகாரி என்றும், விமானத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த விமானத்தில் பயணித்த சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.  இதுகுறித்து, கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல்  கொடுத்தார். இதனை தொடர்ந்து, … Read more

சோபியன் என்கவுண்டர்… மீண்டும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் நடந்த மோதலில் மற்றொரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் மூலம், இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை இரண்டு ஆக உயர்ந்துள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை மாலை சோபியனின் ஜைனாபோரா பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் மேற்கொண்டனர். அப்போது,  பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த தேடல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது என தெரிவித்தார். #ShopianEncounterUpdate: 01 more unidentified #terrorist killed … Read more

மிகப்பெரிய சதி திட்டத்ததோடு எல்லையில் 300 பங்காளிகள் – வாலாட்டினால் நறுக்.. உசார்.,எச்சரிக்கை

யூனியன் பிரதேசமான காஷ்மீருக்குள் அதிக  எண்ணிக்கையிலான தீவிரவாதிகளை நுழைக்க பாகிஸ்தான் ராணுவம் சதித்திட்டத்தை தீட்டி வைத்துள்ளதாக உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலின் படி கரேன் பிரிவுக்கு எதிரே இருக்கும் ஆத்முகாம், துத்னியல் மற்றும் தஹந்தபானி ஆகிய பகுதிகளில் இருக்கும் ஏவுதளங்களில் 80 தீவிரவாத குழுக்கள் தென்படுகிறது. இது பாகிஸ்தான் ராணுவம்  கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகில் உள்ளது.இதிலிருந்து சதி செயலுக்கு திட்டமிட்டுவதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஜெய்ஷ்-இ-முகமது,லஷ்கர்-இ-தொய்பாவை போன்ற தீவிரவாத அமைப்புகளைச் … Read more