ஈராக்கில் கொலை வழக்கில் கைதாகியுள்ள 21 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை!

ஈராக்கில் கொலை வழக்கில் கைதாகியுள்ள 21 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை!

ஈராக்கில் கொலை வழக்கில் கைதாகியுள்ள 21 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு 2014ம் ஆண்டு ஈராக், சிரியா அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நடுகளில் அதிரடியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இந்த பயங்கரவாத அமைப்பில் இருந்த அப்பாவி மக்கள் மீதும் அரசு படை மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்கு தண்டனை அல்லது வாழ்நாள் ஆயுள் தண்டனை இவர்களுக்கு வழங்கப்படும்.

கைதிகள் செய்துள்ள குற்றங்களின் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈராக் நஸ்ரியா மாகாணத்தில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் 21 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொலை மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என ஈராக் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *