ஏர் இந்தியாவில் பயணித்தால் உயிருக்கு ஆபத்து – காலிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை!

Khalistani terrorist - Gurpatwant Pannun

ஏர் இந்தியா விமானத்திற்குப் மிரட்டல் விடுக்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அவர் நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா வழியாக பயணிக்கும் சீக்கியர்கள் “உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உலகளாவிய முற்றுகை … Read more

போர் எதிரொலி: இஸ்ரேலுக்கான விமானங்கள் 18ம் தேதி வரை ரத்து!

#AIRINDIA

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், ஏர் இந்தியா டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட விமானங்களின் இடைநிறுத்தத்தை அக்டோபர் 18 வரை நீட்டித்துள்ளது. வழக்கமாக டெல் அவிவ் நகருக்கு ஐந்து வார திட்டமிடப்பட்ட விமானங்களை இயக்கும் முழு சேவை, முன்னதாக அக்டோபர் 14 வரை சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, இந்த இடைநிறுத்தம் இம்மாதம் 18ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைகளைப் பொறுத்து இந்தியர்களை திரும்ப அழைத்து … Read more

#BREAKING: போர்பதற்றம் எதிரொலி – விமான சேவை ரத்து..!

#AIRINDIA

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில் இன்று  தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.  இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் போர் எதிரொலியாக டெல்லியில் இருந்து இஸ்ரேல் … Read more

ஏர் இந்தியாவுடன் இணைகிறது விஸ்தாரா – டாடா குழுமம் அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு. ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் 2024 மார்ச் மாதத்திற்குள் ஒருங்கிணைக்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை ஒன்றிணைக்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு தெரிவித்துள்ளது. அதாவது, டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டாடாவின் கூட்டு … Read more

புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்துதலுக்கு தடை – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியிடங்களில் புகைபிடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்வதற்கு தடை. இதுதொடர்பாக ஏர் இந்தியாவின் CHRO சுரேஷ் தத் திரிபாதி ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியிடங்களில் புகைபிடிப்பதற்கும், போதைப் பொருட்களை உட்கொள்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். எனவே, ஊழியர்கள் புகைபிடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஏர் இந்தியா ஒரு பொறுப்பான அமைப்பாகும், இந்நிறுவனம் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குவதை … Read more

ஏர் இந்தியாவுக்கு புதிய CEO நியமனம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக கேம்பல் வில்சன் நியமனம். சிங்கப்பூரில் ஏர்லைன்சில் குறைந்த கட்டண துணை விமான நிறுவனமான ஸ்கூட்டின் முந்தைய தலைவரான கேம்ப்பெல் வில்சன், டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குனராக (MD) நியமிக்கப்பட்டுள்ளார். 50 வயதுடைய வில்சன், விமான போக்குவரத்துக்கு துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். துருக்கியின் இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் தலைமை … Read more

#BREAKING: 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் வாங்கும் டாடா ..!

டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா விமானம் விற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜே.ஆர்.டி.டாடா தொடங்கிய டாடா ஏர்மெயில், டாடா ஏர் லைன்ஸாக மாறியபின் ஏர் இந்தியாவாக உருவாகியது. இந்தியாவின் முதல் விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கும், டாடா நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு 1932ல் தொடங்கியது. 1932ல் டாடா ஏர் சர்வீஸ் என்ற பெயரில் இந்தியாவின் முதல் பயணிகள் விமான சேவையை ஜே.ஆர்.டி.டாடா தொடங்கினார். முதல் விமானத்தை ஜே.ஆர்.டி.டாடாவே கராச்சியிலிருந்து மும்பை நகருக்கு 1932ல் அக்.15ஆம் தேதி தானே ஒட்டி … Read more

கேரளா விமான விபத்து… விமானியின் பிழையே காரணம்..!

விமானத்தை தரை இறக்குவதற்கான “நிலையான இயக்க நடைமுறைகளை விமானி பின்பற்றவில்லை” அதுவே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு தீவிரமாக பரவி வந்த நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்தனர். இதனால், மத்திய  அரசு “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி துபாயில் … Read more

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு…!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு. கொரோனா வைரஸ் பாதிப்பானது ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் காவலர்கள், விமான ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றால் … Read more

எச்சரிக்கை : ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தவரா நீங்கள்…? உங்களுக்காக தான் இந்த பதிவு…!

கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா விமான நிறுவன, இணையதள பக்கமான எஸ்ஐடிஏ-ல் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என … Read more