நீங்கள் சிறப்பாகத்தான் செயல்படுகிறீர்கள், இருந்தாலும் உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களை நேர்மறையாக எடுத்து கொள்ளுங்கள் – உச்ச நீதிமன்றம்!

சென்னை உயர்நதிமன்றம் தேர்தல் ஆணையம் குறித்து விமர்சித்து இருந்தது தற்போது விவாதத்திற்குளாகி இருக்கும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் உங்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்மையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் … Read more

“தேர்தல் ஆணையம் தாங்கள் செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்”-உச்சநீதிமன்றம்..!

கொரோனா தீவிரமாக பரவ தேர்தல் ஆணையம்தான் முக்கிய காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை எதிர்த்து,தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதற்குப் பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,தேர்தல் ஆணையம் தாங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினர். கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாகப் பரவியதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும்,தேர்தல் ஆணையம் மீது ஏன் கொலைப்பழி சுமத்தக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம்,தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டியிருந்தது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் … Read more

மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை.! சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது.!

சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம்  மத்திய, மாநில அரசை எச்சரித்துள்ளது. தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதி எல். நாகேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு … Read more

#BREAKING: தடுப்பூசி விலையை நிறுவனங்கள் நிர்ணயிக்க கூடாது.., உச்சநீதிமன்றம்..!

தடுப்பூசிக்கான விலை நிர்ணயங்களை தடுப்பூசி நிறுவனங்கள் நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஆக்சிஜன் மற்றும் தடுப்புப்பூசி  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இதுகுறித்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய மாநில அரசுகள் எந்த அளவிற்கு ஒத்துழைப்புடன் செயல்படுகிறீர்கள். நாடுமுழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் ஆக்சிஜன்  கேட்டு பல பதிவுகள் பதிவிட்டு வருகின்றனர். இதை நாங்களும்பார்த்துள்ளோம். … Read more

ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு..!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து, ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை வழங்கியது. இதனைதொடர்ந்து, … Read more

#BREAKING: உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிக்சை.!

டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தனது வளாகத்தில் சிகிச்சை மையம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமாக உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை மே மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து ஜூன் மாதம் வரை விடுமுறை இருக்கும். ஆனால் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் வரும் மே7-ஆம் தேதி முதல் விடுமுறை அளித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க உச்ச நீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், ஆர்டிபிசி ஆர் சோதனை செய்வதற்கான வசதிகள் ஆகியவற்றை … Read more

#BREAKING: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். எனவே இடை காலம் ஆக்சிஜன் தயாரிப்புக்கு ஆலை … Read more

#BREAKING: தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் !

திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசு வாக்களர்களுக்குப் பரிசு பொருட்கள் வழங்கினார். பரிசுப் பொருள்கள் வழங்கியதை தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் தங்கம் தென்னரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனவே திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கூறினார். … Read more

பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்..!

பேரறிவாளன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு உள்ள நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது தண்டனையை நிறுத்தி வைக்க்கோரிய மனுவும் , பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கடிதத்தின் நகல் கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

#BREAKING: உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி என்.வி ரமணா..?

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதியாக, மூத்த நீதிபதி ரமணாவை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே பரிந்துரை செய்தார். பரிந்துரைக் கடிதத்தை எஸ் ஏ பாப்டே மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே ஏப்ரல் 23-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.