#BREAKING: உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிக்சை.!

டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தனது வளாகத்தில் சிகிச்சை மையம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கமாக உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை மே மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து ஜூன் மாதம் வரை விடுமுறை இருக்கும். ஆனால் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் வரும் மே7-ஆம் தேதி முதல் விடுமுறை அளித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க உச்ச நீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், ஆர்டிபிசி ஆர் சோதனை செய்வதற்கான வசதிகள் ஆகியவற்றை மேற்கொள்ள தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் பல மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வரும் நிலையில் தனது வளாகத்தில் சிகிச்சை மையம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

author avatar
murugan