#BREAKING: தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்..!

தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி நடந்தது. இதில், திமுக  தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பெறுப்பேற்கவுள்ளார். ஆனால், இந்தப் பதவியேற்பதற்கு முன் திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும். அதன்படி … Read more

#BREAKING: தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் !

திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசு வாக்களர்களுக்குப் பரிசு பொருட்கள் வழங்கினார். பரிசுப் பொருள்கள் வழங்கியதை தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் தங்கம் தென்னரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனவே திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கூறினார். … Read more

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.!

சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாகக் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் 72.8% வாக்குகள் பதிவானது. வேளச்சேரி தொகுதியில் தேர்தல் நடைபெற்ற அன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் இன்று  வாக்கிப்பதிவு நடைபெறும் என … Read more

#BREAKING: திருச்சுழியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார். திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, கடந்த 19ம் தேதி ஆவியூர் என்ற கிராமத்தில் பணம், பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது … Read more