பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் விசாரணை..!

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குற்றமற்றவர் என்ற சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிரான வழக்கை வருகின்ற அக்.26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர்.இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து,குஜராத் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர்.அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் … Read more

#BREAKING: மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு. மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையதுக்கு (TNPSC) உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய உத்தரவை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் … Read more

கதிர்வீச்சு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தென் தமிழக மக்களும் பாதிக்கப்படுவார்கள் – அன்புமணி ராமதாஸ்

மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அணுக்கழிவு சேமிப்பு பாதாள மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து … Read more

#Breaking:பட்டாசு தயாரிப்பில் விதிமீறல் – உச்சநீதிமன்றம்..!

பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளைமீறி பட்டாசு தயாரித்து இறுப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் ,தடை செய்யப்பட்ட பட்டாசுகளை ஏன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கேள்வியை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தார்கள்.இந்த நிலையில்,இது தொடர்பான வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்து இருப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் … Read more

#Breaking:நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு…!

நீட் தேர்வை ரத்து செய்து,புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,நடப்பு ஆண்டில் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி … Read more

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை ஏன் தயாரிக்கிறீர்கள்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

உச்சநீதிமன்ற தடையை மீறி தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் வெடிக்கப்படுகின்றனவா என நீதிபதிகள் கேள்வி. தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள் என்று பட்டாசு ஆலைகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பெரிய சரவெடிகள் தடை செய்யப்பட்டும் அவை வெடிக்கப்படுவதை பார்க்கிறோம் என்றும் அரசியல் கட்சிகளின் வெற்றி கூட்டங்கள், திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் மத நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கின்றன எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்ற தடையை மீறி தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் வெடிக்கப்படுகின்றனவா என்பதை விளக்க வேண்டும் … Read more

#BREAKING: பட்டாசுகள் வழக்கு பிற்பகலுக்கு விசாரணை ஒத்திவைப்பு..! 

தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பு. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தற்போது வரை தீபாவளிக்கு காலை 1 மணி நேரமும், மாலை 1 மணிநேரமும் நிபந்தனையுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையெடுத்து, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 4 மணி … Read more

#BREAKING: பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ..!

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல். தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என நீட்டித்து வழங்க வேண்டும். பசுமை பட்டாசு தயாரிக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தற்போது தீபாவளிக்கு … Read more

#Breaking:ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கு ;தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவு – உச்சநீதிமன்றம் ரத்து..!

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. முருகன் தனது பதவியில் இருந்தபோது,தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.இதனையடுத்து,இந்தப் புகார் குறித்து விசாரிக்கக் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து தமிழக காவல்துறை உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக விசாரித்த விசாகா குழு, இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்குப் … Read more

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கோரிக்கையை ஏற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 4 மாத கால அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச்க்குள் நிறைவடைந்துவிடும். எனவே, தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கட்டாயம் வழங்க வேண்டும் என்று வழக்கு விசாரணை வருவதற்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறுவதற்கு இரண்டரை … Read more