பட்டாசுக் கடைகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.! வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தகவல்.!

Vikramaraja

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில், பட்டாசு கடைகளுக்கு விற்பனைக்கான உரிமம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு கடைகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்கிரம ராஜா, “பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகளை தமிழகம் முழுவதும் வியாபாரிகள் … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் – சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்புசாமி, செந்தில்குமார் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெடிவிபத்தில் காயமடைந்த 4 தொழிலாளர்களுக்கு சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சிவகாசி களத்தூரில் … Read more

#Breaking:மீண்டும் ஒரு துயரச்சம்பவம்…பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் பலி!

விருதுநகர்:சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜனவரி 1 ஆம் தேதி சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில்,விருதுநகர் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் மஞ்சள்ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இன்று காலை பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் வெடிவிபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த … Read more

#Breaking:பட்டாசு தயாரிப்பில் விதிமீறல் – உச்சநீதிமன்றம்..!

பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளைமீறி பட்டாசு தயாரித்து இறுப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் ,தடை செய்யப்பட்ட பட்டாசுகளை ஏன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கேள்வியை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தார்கள்.இந்த நிலையில்,இது தொடர்பான வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்து இருப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் … Read more

ஹரியானா கர்னால் மாவட்ட பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் எனுமிடத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி இருக்கிறது. ஒரே இடத்தில் அதிகமான ஊழியர்கள் வேலை செய்வதும் இதற்கு காரணமாக அமைகிறது என அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், தொடர்ந்து அதே போலதான் பல்வேறு இடங்களிலும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் … Read more

#Breaking: பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரத்தில் ஆலை உரிமையாளர் கைது…!

பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் கடந்த 12-ஆம் தேதி பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் பலத்த தீக்காயத்துடன் உள்ளதால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த … Read more

தமிழக அரசு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி கோரிக்கை

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய  பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இந்த வெடி விபத்தில் 12 பேர் உயிர் இழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெடி விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது … Read more

சாத்தூர் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து – 7 தொழிலாளிகள் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய மாரியம்மாள் எனும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் … Read more

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் பலி!

விருது நகர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள குந்தலப்பட்டி எனும் இடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று காலை பட்டாசு தயாரிக்க கூடிய பணி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் எனும் 55 … Read more