#BREAKING: பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ..!

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல்.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என நீட்டித்து வழங்க வேண்டும். பசுமை பட்டாசு தயாரிக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி தற்போது தீபாவளிக்கு 2 மணிநேரமும், புத்தாண்டுக்கு 5 நிமிடங்களும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 5 நிமிடமும் பட்டாசு வெடிக்க நிபந்தனையுடன் அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது என கூறப்படுகிறது. 

author avatar
murugan