செய்தியாளர் சந்திப்பில் நடந்த சம்பவம்.. தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திகுத்து!

Lee Jae myung

தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், இன்று செய்தியளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே மியுங், தெற்கு துறைமுக நகரமான புசானின் கதியோக் தீவில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய பணிகளை மேற்பார்வையிட இன்று காலை அங்கு சென்றுள்ளார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கூட்டத்தில் இருந்த … Read more

அதிர்ச்சி…குன்னூரில் பள்ளி அருகே மாணவிக்கு கத்திக்குத்து!

குன்னூரில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு கத்தி குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம்,குன்னூர் ஒய்எம்சி அருகே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற நிலையில்,அப்போது அவரை பின்தொடர்ந்த ஆசிக் என்ற இளைஞர் பள்ளி  அருகே மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.இதனைக் கண்ட  பொதுமக்கள் இளைஞரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது,அந்த இளைஞர் மது போதையில் இருந்தது … Read more

தேவாலய வாசலில் வைத்து பாதிரியாருக்கு பலமுறை கத்தி குத்து; கன்னியாஸ்திரி காயம்!

பிரான்ஸில் உள்ள நைஸ் பகுதியில் உள்ள தேவாலய வாசலில் வைத்தே பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர், தேவாலயம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் கூறுகையில், நாங்கள் பாதிரியாரை கொல்ல வேண்டும் என கூச்சலிட்டபடி அவ்விடத்திற்கு வந்த சிலர் தான் இந்த செயலை செய்ததாக கூறியுள்ளனர். பாதிரியாரின் மார்பு கால்களில் அதிக அளவில் காயம் ஏற்பட்டு … Read more

தந்தை தோல்வியடைந்த வருத்தத்தில் நாற்காலியில் குத்திய மகன் – வைரல் வீடியோ உள்ளே!

ஏபிடி வில்லியர்ஸ் மகன் தனது தந்தை தோல்வியடைந்ததால், நாற்காலியில் கையால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு நடந்த ஐபிஎல் 2021 14ஆவது சீசன் 39 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியை காண்பதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் அவர்களின் மூத்த மகன் டேனியல் வந்திருந்துள்ளான். தனது தந்தை விளையாடுவதை தாயுடன் சேர்ந்து உற்சாகப்படுத்தி கொண்டு இருந்துள்ளார். ஆனால் அவரது … Read more

லண்டனில் இந்திய நாட்டை சேர்ந்த தாய், தனது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை..!

லண்டன் நகரத்தில் இந்திய நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் அவரது மகளை 15 முறை குத்தி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சுதா-சிவானந்தன் தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து லண்டனில் வசித்து வருகிறன்றனர். இவர்களுக்கு சாயாகி என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும், மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து, இயல்பு … Read more

வரதட்சணை வழக்கு தொடர்ந்ததால், 20 முறை குத்தி 37 வயது பெண்ணை கொலை செய்த மைத்துனர்!

தன் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்ததால், 20 முறை குத்தி 37 வயது பெண்ணை கொலை செய்த மைத்துனர். பெங்களூருவில் உள்ள ப்லூருவில் பெஸ்காமில் ஊழியராக பணியாற்றி வரக்கூடிய நபர் ஒருவர் தனது மனைவியை வரதட்சணைக்காக துன்புறுத்தி வந்துள்ளார். எனவே அவரது மனைவியின் சகோதரி ஆகிய ஸ்ரேயாசி பானர்ஜி எனும் பெண் அந்த நபர் மீது வரதட்சனை துன்புறுத்தல் வழக்கு தாக்கல் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது ஏற்கனவே பகையுடன் இருந்த மைதுனராகிய … Read more