தேவாலய வாசலில் வைத்து பாதிரியாருக்கு பலமுறை கத்தி குத்து; கன்னியாஸ்திரி காயம்!

தேவாலய வாசலில் வைத்து பாதிரியாருக்கு பலமுறை கத்தி குத்து; கன்னியாஸ்திரி காயம்!

பிரான்ஸில் உள்ள நைஸ் பகுதியில் உள்ள தேவாலய வாசலில் வைத்தே பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர், தேவாலயம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் கூறுகையில், நாங்கள் பாதிரியாரை கொல்ல வேண்டும் என கூச்சலிட்டபடி அவ்விடத்திற்கு வந்த சிலர் தான் இந்த செயலை செய்ததாக கூறியுள்ளனர். பாதிரியாரின் மார்பு கால்களில் அதிக அளவில் காயம் ஏற்பட்டு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கன்னியாஸ்திரி 72 வயதுடையவர் எனவும், அவரது கைகளிலும் கத்திக்குத்து காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் அடைப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube