வரதட்சணை வழக்கு தொடர்ந்ததால், 20 முறை குத்தி 37 வயது பெண்ணை கொலை செய்த மைத்துனர்!

தன் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்ததால், 20 முறை குத்தி 37 வயது பெண்ணை கொலை செய்த மைத்துனர்.

பெங்களூருவில் உள்ள ப்லூருவில் பெஸ்காமில் ஊழியராக பணியாற்றி வரக்கூடிய நபர் ஒருவர் தனது மனைவியை வரதட்சணைக்காக துன்புறுத்தி வந்துள்ளார். எனவே அவரது மனைவியின் சகோதரி ஆகிய ஸ்ரேயாசி பானர்ஜி எனும் பெண் அந்த நபர் மீது வரதட்சனை துன்புறுத்தல் வழக்கு தாக்கல் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது ஏற்கனவே பகையுடன் இருந்த மைதுனராகிய பெஸ்காம் ஊழியர், 37 வயது மதிக்கத்தக்க அவரது மைத்துனர் வீட்டில் இருந்த பொழுதும் அவரது வீட்டிற்கு இரவு எட்டு மணி அளவில் சென்றுள்ளார்.

அங்கு கத்தியை வைத்து அவரை பலமுறை குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த ஸ்ரேயாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின் அவரது தொண்டையை அறுத்து இருந்த கொஞ்சம் உயிரையும் போக்க நினைத்து அந்த நபர் சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பெண்ணின் உடலில் 20 முறை கத்தியால் குத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்துனர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ப்லூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Rebekal

Leave a Comment