தந்தை தோல்வியடைந்த வருத்தத்தில் நாற்காலியில் குத்திய மகன் – வைரல் வீடியோ உள்ளே!

ஏபிடி வில்லியர்ஸ் மகன் தனது தந்தை தோல்வியடைந்ததால், நாற்காலியில் கையால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று இரவு நடந்த ஐபிஎல் 2021 14ஆவது சீசன் 39 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியை காண்பதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் அவர்களின் மூத்த மகன் டேனியல் வந்திருந்துள்ளான். தனது தந்தை விளையாடுவதை தாயுடன் சேர்ந்து உற்சாகப்படுத்தி கொண்டு இருந்துள்ளார்.

ஆனால் அவரது தந்தை 6 பந்துகளில் 11 ரன்கள் மட்டும் அடித்து ஆட்டமிழக்கவே, அதை ஏற்றுக்கொள்ள முடியாத மகன் அந்த சமயத்தில் தனது கையை நாற்காலியில் வேகமாக குத்தியுள்ளான். சிறுவன் வேகமாக கையை நாற்காலியில் குத்தியதை அவரது தயார் தடுக்க முயன்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal