தொடங்கியது கவுண்டன்…3 செயற்கைக்கோள்களுடன் இன்று மாலை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக தெளிவுடன் ஒரே நேர்த்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்கும் டிஎஸ்-இஓ(DS-EO) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன்,என்இயு-சாட்(NeuSAR, SAR),ஸ்கூப் 1 என மூன்று செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் இன்று( ஜூன் 30 ஆம் தேதி) விண்ணில் செலுத்த உள்ளது.அதன்படி,ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி53 விண்கலம் இன்று மாலை 6 மணிக்கு புறப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை … Read more

செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம், பகவத் கீதை வசனம்.. விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி51!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து பிஎஸ்எல்வி – சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதில் உள்ள செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம், பகவத் கீதை வசனம் இடம்பெற்றுள்ளது. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து இன்று காலை 10:28 மணிக்கு பிஎஸ்எல்வி – சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் அமேசானியா-1 மிஷன் என்ற செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ, விண்ணுக்கு செலுத்தவுள்ளது. இந்த அமேசானியா, … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிப்ரவரி 28-இல் விண்ணில் பாயவுள்ள கோவை மாணவர்களின் செயற்கைக்கோள்!

பிப்ரவரி 28ஆம் தேதி கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வடிவமைத்த 460 கிராம் மட்டுமே கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் பாய உள்ளது. கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தனியார் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வடிவமைத்த460 கிராம் மட்டுமே எடை கொண்ட செயற்கைக்கோள் பிப்ரவரி 28ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டவுள்ள  இந்த மாணவர்களின் தயாரிப்பான செயற்கைக்கோளுக்கு ஸ்ரீசக்தி ஷார்ட … Read more

காஃபென்-13 கச்சிதமாக ஏவி சீனா கர்ஜனை!வெற்றிகரமாக பாய்ந்தது!

சீனா ஆப்டிகல் ரிமோட் சென்சிங் என்ற புதிய செயற்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. சீனாவின் ஜிச்சாங் ஏவுதளத்தில் இருந்து காஃபென் 13 செயற்கைக்கோளுடன் மார்ச்-3பி ராக்கெட் இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது. விண்ணை நோக்கி பாய்ந்த புதிய செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதைக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சீனா ஏவியுள்ள இந்த காஃபென் செயற்கோள் ஆனது நில ஆய்வு,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வானிலை முன்னறிவிப்பு போன்ற பணிகளை செய்ய உள்ளது என்று ஜிச்சாங் ஏவுதள துணை இயக்குநர் வு வீகி  … Read more

கடல் சார் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு செயற்கைகோளை ஏவியது சீனா….

நம் அண்டை நாடான சீனா அருகில் உள்ள அனைத்து நாடுகளுடன் பகைமையை பாராட்டிவரும் நிலையில் தற்போது உலக நாடுகள் சீனாவுக்கு எதிரக ஓரணியில் திரள ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சீனா இந்த சம்பவத்திலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ‘ஹையாங் 2 சி’ என்ற அந்த செயற்கைக்கோள் ‘லாங் மார்ச் 4 பி’ என்ற  ராக்கெட் … Read more

56 வருடம் கழித்து உலகிற்கு திரும்பும் நாசாவின் முதல் செயற்கைக்கொள்!

நாசாவின் முதல் விண்கலமான ASA’s Orbiting Geophysics Observatory 1 (OGO-1), இந்த வார இறுதியில் பூமிக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 25 அன்று அரிசோனா நாட்டின் கேடலினா ஸ்கை சர்வே (CSS) ஒரு சிறிய பொருளைக் கவனித்தது, அது உலகை நோக்கி வருவதாக தெரிவித்தனர். இதனை கவனித்த ஹவாய் பல்கலைக்கழகத்தின் சிறுகோள் நிலப்பரப்பு-தாக்கம் கடைசி எச்சரிக்கை அமைப்பு, (Asteroid Terrestrial-impact Last Alert System ATLAS ) உண்மை என உறுதிப்படுத்த தொடங்கியது. இறுதியாக, நாசாவின் … Read more

புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா!

சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கை கோளை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனா தனது புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுவான் ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 10:27 க்கு செயற்கைக்கோளை சீனா விண்ணில் ஏவியுள்ளது. ஏற்கனவே காபன்9 05 என்ற செயற்கைகோள் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். நில … Read more

சீனாவில் புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.!

சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை நேற்று விண்ணில் ஏவியது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து நேற்று பெய்ஜிங் நேரப்படி மதியம் 12:01 மணிக்கு சீனா ஒரு புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளை Gaofen-9 04 என்ற செயற்கைக்கோள்  Long March-2D கேரியர் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. இது துணை மீட்டர் நிலை வரை ஒரு தீர்மானத்தைக் கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் முக்கியமாக நில … Read more

நாளை விண்ணில் பாய்கின்றது ஜிசாட்-31 செயற்கைக்கோள்…!!

ஜிசாட்-31 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகின்றது இந்திய விஞ்சானத்தில் தொடர்ந்து பல்வேறு சாதனையை நிகழ்த்தி வருகின்றது இஸ்ரோ.இந்நிலையில் இஸ்ரோ தகவல் தொடர்பு வசதிக்கு பயன்படுத்த ஜிசாட்-31 என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்புவது என்ற முடிவில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தகவல் தொடர்பு வசதிகளை பெருக்கும் வகையில் 40வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ஜிசாட்-31 என்ற செயற்கைக்கோளை  ‘இஸ்ரோ’ உருவாக்கி வந்தது.2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட ஜிசாட்-31 செயற்கைகோள் நாளை விண்ணுக்கு அனுப்பப்பட இருக்கின்றது.இதன் ஆயுட்காலம், 15 ஆண்டுகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கலாம் சாட் செயற்கைகோள்…தொடங்கியது கவுன்ட் டவுன் துவக்கம்…!!

கலாம் சாட்” செயற்கைகோள் இன்று விண்ணில் செலுத்த உள்ள நிலையில் அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது. மாணவர்கள் இணைந்து தயாரித்த சிறிய வடிவிலான விண்கலம் கலாம் சாட் . இதனுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் இணைந்து தயாரித்தது மைக்ரோசாட்-ஆர் இமேஜிங். இந்த 2 செயற்கோள்களும் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளன. இதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது. மாணவர்கள் சேர்ந்து தயாரித்த ‘கலாம் சாட்’ செயற்கைகோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும், இஸ்ரோ தயாரித்த “மைக்ரோசாட்-ஆர் இமேஜிங்” செயற்கைகோள் பூமி கண்காணிப்புக்காகவும் … Read more