இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என தகவல். தமிழகத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப் படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது. எனினும். … Read more

அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை.. 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்!

குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என அமைச்சர் சக்கரபாணி தகவல். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உயிரிழந்த பிறகும் குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகைக் கட்டிடத்தில் … Read more

ரேஷன் கடைகளில் புதிய திட்டம் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டமானது சோதனையில் இருப்பதாக  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்  நடைபெற்ற நிலையில்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 169 இடங்களில் நேரடி … Read more

#JustNow: 100 நாள் வேலை திட்டத்தில் ரேஷன் கடை கட்ட நடவடிக்கை – அமைச்சர் ஐ.பெரியசாமி

ரேசன் கடைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிவேகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேரவையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த மாவட்டத்தில் எங்கு கடைகள் திறக்கப்படாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டு தெரிவித்தால் உடனடியாக கடைகள் திறக்க … Read more

இனி ரேஷன் கடைகளில் ஆவின்.. பால் உற்பத்தியாளர் வாரிசுக்கு பரிசு – அமைச்சர் நாசர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் நாசர் அறிவிப்பு. தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் 2 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். பால்வளம் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்மொழி கல்வியில் 12-ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பால் … Read more

ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி

நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் அரசு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.  தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,  கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும். கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கை … Read more

நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் நிர்ணயம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8:30 முதல் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் 7 மணி வரையிலும் செயல்படும் என்றும், இதர பகுதிகளில் காலை 9 முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 முதல் 6 மணி வரையிலும் … Read more

பொங்கல் சிறப்பு தொகுப்பு பெறாதவர்கள் இன்று காலை முதல் பெறலாம் …!

பொங்கல் சிறப்பு தொகுப்பு பெறாதவர்கள் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் முடிவடைந்த பின்பும் பொங்கல் தொகுப்பை பெறாதவர்கள் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 17ஆம் தேதி காலை 7 மணி முதல் சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு … Read more

நியாய விலைக்கடை – தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு.!

நியாய விலைக்கடைகளில் இன்றியமையா பண்டங்களை, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெறலாம என உணவுப் பாதுகாப்புத்துறை அறிவிப்பு. நியாய விலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாய விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றுக்கு முறையான ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், எந்தவொரு அட்டைதாரரும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அறுவலகங்களுக்கு இக்கோரிக்கை … Read more

புதிய ரேசன் கடைகள் அமைக்கப்படும் – தமிழக நிதி அமைச்சர்

தேவையுள்ள இடங்களில் நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில், சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில், நியாய … Read more