இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என தகவல். தமிழகத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப் படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது. எனினும். … Read more

#Breaking:இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தமிழகம் வருகை!

இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடிக்கு வருகை. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையானது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக இலங்கை தமிழர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு அகதிகளாக தமிழகத்திற்கு வருகை புரிகின்றனர். இந்நிலையில்,இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாகவும்,தனுஷ்கோடிக்கு அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ … Read more

வங்கி ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – மத்திய அரசு ஒப்புதல்…!

வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குடும்ப ஓய்வூதியத்தை, கடைசியாக பெற்ற சம்பளத்தில் 30 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மும்பைக்கு 2 நாள் பயணம் மேற்கொண்ட,மத்திய நிதியமைச்சர் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,ஸ்மார்ட் வங்கி முறைக்கான சீர்திருத்த கொள்கை ‘ஈஸ் 4.0 (EASE 4.0) திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். “Finance Minister Nirmala Sitharaman launched EASE 4.0 in Mumbai. EASE (Enhanced Access and … Read more

அடுத்த வாரம் முதல் டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை அதிகரிப்பு – டாட்டா அதிகாரி..!

அடுத்த வாரம் முதல் டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக டாட்டா வணிக பிரிவு தலைவர் ஷைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாட்டா நிறுவனம் உள்நாட்டு சந்தையில் டியாகோ, நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற பல பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில்,டாடா மோட்டார்ஸ் அடுத்த வாரம் முதல் அதன் முழு அளவிலான பயணிகள் வாகனங்களின் விலையை அதிகரிக்க விரும்புவதாக,நிறுவனத்தின் வணிக பிரிவு தலைவர் ஷைலேஷ் சந்திரா … Read more

வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் உயர்ந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை…!

வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 க்கு விற்பனை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அதன்படி,சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 99.80 … Read more

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு..!இன்று முதல் அமல்…!

சென்னையில்,இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.71-க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.88.62-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த நிலையில்,தற்போது அவற்றின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. … Read more

மின்சார கார் உற்பத்தி மூலம் டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் உச்சத்தை எட்டியுள்ளது…!

டெஸ்லா நிறுவனம்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,80,338 வாகனங்களை தயாரித்து 1,84,777 வாகனங்களை விற்பனை செய்ததாகவும்,இதனால்,10.3 பில்லியன் டாலர் சம்பாதித்து வருவாயை உயர்த்தியதாக தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடைந்த நிலையில்,பல நிறுவனங்கள் தங்கள் வருவாயை கணக்கிட்டு வருகின்றன.அதன் வரிசையில்,அமெரிக்க மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா தனது வருவாயை கணக்கிட்டு கூறியுள்ளது. அதன்படி டெஸ்லா நிறுவனம்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,80,338 வாகனங்களை தயாரித்து 1,84,777 வாகனங்களை 10.3 பில்லியன் … Read more